News

Saturday, 23 July 2022 11:00 AM , by: Elavarse Sivakumar

செங்கல்பட்டு மாவட்டத்தித்தில் உள்ள அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில் அழிச்சாட்டியம் செய்துவந்த, 300க்கும் மேற்பட்ட குரங்குகள், கூண்டு வைத்து பிடிக்கப்பட்டன. குரங்குகளின் தொல்லையை கட்டுப்படுத்த பேரூராட்சி நிர்வாகம் மற்றும் வனத்துறை எடுத்த நடவடிக்கையை, பொதுமக்கள் பாராட்டினர்.

அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்தில் வெங்கடேசபுரம், ராவுத்தநல்லுார், உட்பட பல பகுதிகளில், குரங்குகள் கூட்டமாக திரிவது அதிகரித்தது. கடை வீதியில் பொருட்களை வாங்கிச் செல்லும் பொதுமக்களிடமிருந்து பையை பறிப்பது, வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை சேதப்படுத்துவது, சமைத்த உணவுகளை துாக்கி செல்வது போன்ற அட்டகாசங்களை, குரங்குகள் செய்து வந்தன.

உணவுப் பொறி

இதையடுத்து, குரங்குகளை பிடிக்கும் நடவடிக்கையில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.குரங்குகளை பிடிப்பதற்கான பயிற்சியில் தேர்ச்சி பெற்றோர் மூலம், இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது.

கூண்டிலும் இரை

குரங்குகளுக்கு பிடித்தமான வேர்க்கடலை, தேங்காய், வாழைப்பழம் மற்றும் பிஸ்கட் போன்றவற்றை, குரங்குகள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் சிறிய அளவு வீசி, மீதம் உள்ளவற்றை இரும்பு கூண்டுக்குள் வைத்துவிட்டனர்.
இவற்றை உண்பதற்காக, குரங்குகள் ஒவ்வொன்றாக இரை தேடி கூண்டுக்குள் வந்ததும், வனக்காவலர் கூண்டுகளை மூடிவிட்டார்.

300 குரங்குகள்

இதன்மூலம் இரு நாட்களில் 300க்கும் மேற்பட்ட குரங்குகளை, கூண்டு வைத்து பிடித்து உள்ளனர்.பிடிபட்ட குரங்குகளை, வனப் பகுதிக்குள் விடுவதற்கு, வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மேலும் படிக்க...

விமானத்தில் பயணித்த பெற்றோர்- இன்ப அதிர்ச்சி அளித்த மகன்!

சென்னை to மாமல்லபுரம்- இலவச பேருந்து சேவை!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)