மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 14 March, 2021 11:08 AM IST
Credit : Hindu Tamil

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதாகல் ஏலக்காய் செடிகள் கருகத் தொடங்கியுள்ளனர். அதை தவிர்க்கும் பொருட்டு ஏலக்காய் பயிரிட்டுள்ள விவசாயிகள் பைப் மூலம் தண்ணீ் தெளித்து வெப்பத்தை தணித்து வருகின்றனர்.

ஏலக்காய்க்கு உகந்த நிலப்பகுதி

கேரள-தமிழக எல்லையான இடுக்கி மாவட்டத்தில் அதிகளவில் ஏலக்காய் பயிரிடப்படுகிறது. சுமார் 1.25 லட்சம் ஏக்கர் பரப்பளவில் இங்கு ஏல விவசாயம் நடைபெறுகிறது. இப்பகுதி தண்ணீர் அதிகம் தேங்காத சரிவுப்பகுதியாக அமைந்துள்ளதால் வளர்ச்சிக்கு உகந்ததாக உள்ளது. மேலும் ஈரக்காற்றும், குறைவான வெப்பமும் கொண்ட பருவநிலை உள்ளதால் தரமான ஏலக்காய் இங்கு விளைகின்றன.

வெயிலுக்கு தாங்காத ஏலச்செடி

ஏலக்காய் செடிகள் பொதுவாக பருவகாலங்களில் 20 முதல் 25 டிகிரி வெப்பநிலையையும், குளிர்காலத்தில் 12 முதல் 15 டிகிரி வெப்பநிலை வரையும் தாங்கக் கூடியது. வெப்பத்தில் செடி கருகாமல் இருக்க முறையாக பராமரிக்க வேண்டும். இதற்காக ஏலத்தோட்டங்களுக்கு இடையே பலா உள்ளிட்ட மரங்களை வளர்ப்பர். இதன் நிழல் மூலம் அதிக வெயிலில் இருந்து ஏலச்செடிகள் காப்பாற்றப்படும்.

கொளுத்தும் கோடை வெயில்

தற்போது இடுக்கி மாவட்டத்தில் கடும் வெயில் நிலவி வருகிறது. கோடைக்கு முன்பே துவங்கிய இந்த வெப்பத்தினால் ஏலக்காய் செடிகள் கருகத் தொடங்கியுள்ளன. கோடைமழையின் போது பெய்யும் மழை இதன் வளர்ச்சிக்கு உகந்தது. ஆனால் தற்போது மழை இல்லாமலும், அதிக வெப்பநிலையை எதிர் கொள்ள முடியாமலும் ஏலக்காய் செடிகளின் இலைகள் கருகத் தொடங்கி உள்ளன.

எனவே ஏலக்காய் பயிரிட்டுள்ள விவசாயிகள் கிணறுகளில் இருந்து பிளாஸ்டிக் பைப் மூலம் செடிகளின் மேலே தெளித்து அதன் வெப்பத்தை தணித்து வருகின்றனர்.

மேலும் படிக்க....

Jan Dhan Yojana: ஜன் தன் திட்டம் குறித்து அறிந்து கொள்ள மாநில அளவிலான இலவச உதவி என்கள்!

பெண்களுக்காக 50% மானிய விலையில் அம்மா ஸ்கூட்டர் திட்டம்! - இப்போதே முந்துங்கள்!!

ஓய்வூதியம் வேண்டுமா..? ரூ.55- ரூ.200 செலுத்தி மாதம் ரூ.3000 பெற்றிடுங்கள்!!

English Summary: Cardamom plants dries in the summer! - Farmers spraying water through pipes to avoid form heat
Published on: 14 March 2021, 11:08 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now