News

Sunday, 14 March 2021 11:00 AM , by: Daisy Rose Mary

Credit : Hindu Tamil

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதாகல் ஏலக்காய் செடிகள் கருகத் தொடங்கியுள்ளனர். அதை தவிர்க்கும் பொருட்டு ஏலக்காய் பயிரிட்டுள்ள விவசாயிகள் பைப் மூலம் தண்ணீ் தெளித்து வெப்பத்தை தணித்து வருகின்றனர்.

ஏலக்காய்க்கு உகந்த நிலப்பகுதி

கேரள-தமிழக எல்லையான இடுக்கி மாவட்டத்தில் அதிகளவில் ஏலக்காய் பயிரிடப்படுகிறது. சுமார் 1.25 லட்சம் ஏக்கர் பரப்பளவில் இங்கு ஏல விவசாயம் நடைபெறுகிறது. இப்பகுதி தண்ணீர் அதிகம் தேங்காத சரிவுப்பகுதியாக அமைந்துள்ளதால் வளர்ச்சிக்கு உகந்ததாக உள்ளது. மேலும் ஈரக்காற்றும், குறைவான வெப்பமும் கொண்ட பருவநிலை உள்ளதால் தரமான ஏலக்காய் இங்கு விளைகின்றன.

வெயிலுக்கு தாங்காத ஏலச்செடி

ஏலக்காய் செடிகள் பொதுவாக பருவகாலங்களில் 20 முதல் 25 டிகிரி வெப்பநிலையையும், குளிர்காலத்தில் 12 முதல் 15 டிகிரி வெப்பநிலை வரையும் தாங்கக் கூடியது. வெப்பத்தில் செடி கருகாமல் இருக்க முறையாக பராமரிக்க வேண்டும். இதற்காக ஏலத்தோட்டங்களுக்கு இடையே பலா உள்ளிட்ட மரங்களை வளர்ப்பர். இதன் நிழல் மூலம் அதிக வெயிலில் இருந்து ஏலச்செடிகள் காப்பாற்றப்படும்.

கொளுத்தும் கோடை வெயில்

தற்போது இடுக்கி மாவட்டத்தில் கடும் வெயில் நிலவி வருகிறது. கோடைக்கு முன்பே துவங்கிய இந்த வெப்பத்தினால் ஏலக்காய் செடிகள் கருகத் தொடங்கியுள்ளன. கோடைமழையின் போது பெய்யும் மழை இதன் வளர்ச்சிக்கு உகந்தது. ஆனால் தற்போது மழை இல்லாமலும், அதிக வெப்பநிலையை எதிர் கொள்ள முடியாமலும் ஏலக்காய் செடிகளின் இலைகள் கருகத் தொடங்கி உள்ளன.

எனவே ஏலக்காய் பயிரிட்டுள்ள விவசாயிகள் கிணறுகளில் இருந்து பிளாஸ்டிக் பைப் மூலம் செடிகளின் மேலே தெளித்து அதன் வெப்பத்தை தணித்து வருகின்றனர்.

மேலும் படிக்க....

Jan Dhan Yojana: ஜன் தன் திட்டம் குறித்து அறிந்து கொள்ள மாநில அளவிலான இலவச உதவி என்கள்!

பெண்களுக்காக 50% மானிய விலையில் அம்மா ஸ்கூட்டர் திட்டம்! - இப்போதே முந்துங்கள்!!

ஓய்வூதியம் வேண்டுமா..? ரூ.55- ரூ.200 செலுத்தி மாதம் ரூ.3000 பெற்றிடுங்கள்!!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)