மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 31 October, 2021 8:05 PM IST
Cauvery water will be available

அடுத்த வருடம் குறுவை சாகுபடிக்கு காவிரி நீர் (Cauvery water) கிடைக்கும்!
கர்நாடகா வழங்க வேண்டிய நிலுவை நீரின்அளவு 7.37 TMC-யாக குறைந்துள்ளதால், அடுத்தாண்டு குறுவை சாகுபடிக்கு வாய்ப்பு உருவாகியுள்ளது.

நீர் நிலுவை

தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 177.25 டி.எம்.சி., நீரை, கர்நாடக அரசு வழங்க வேண்டும். மாதந்தோறும் வழங்க வேண்டிய நீர் அளவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி இம்மாதம் 1ம் தேதி நிலவரப்படி, 90.6 டி.எம்.சி., நீர் வழங்கப்பட்டது; 31.3 டி.எம்.சி., நீர் நிலுவை வைக்கப்பட்டது. இது குறித்து காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கூட்டத்தில், தமிழக அரசு முறையீடு செய்தது. தமிழகத்திற்கு உரிய நீரை நிலுவையின்றி விடுவிக்க, கர்நாடகா அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

நீர் இருப்பு

இதைத்தொடர்ந்து, கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறக்கப்பட்டு வருகிறது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், தமிழகத்திற்கு அதிகளவில் நீர் திறக்கப்படுகிறது. இதனால், நிலுவை நீரின் அளவு 27ம் தேதி நிலவரப்படி, 7.37 டி.எம்.சி.,யாக குறைந்துள்ளது. வரும் நாட்களில், இது முழுமையாக குறையும் என தெரிகிறது. சேலம் மாவட்டம் மேட்டூர் அணை (Mettur Dam) நீர் இருப்பும் 76.6 டி.எம்.சி.,யாக அதிகரித்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 25 ஆயிரத்து 564 கன அடி நீர்வரத்து நேற்று முன்தினம் கிடைத்தது. இதனால், நீர் இருப்பு மேலும் உயரும் வாய்ப்புள்ளது.

தற்போது, டெல்டா மாவட்டங்களில் சம்பா பருவ நெல் சாகுபடி நடந்து வருகிறது. வடகிழக்குபருவ மழை துவங்கி உள்ளதால், பாசன தேவை பூர்த்தியாகி வருகிறது. எனவே, மேட்டூர் அணையில் (Mettur Dam) உள்ள நீரை, முறைவைத்து திறந்தால், அடுத்த ஆண்டு ஜூன் மாதம் குறுவை பருவ பாசனத்திற்கும் திறக்க முடியும். அரசு உத்தரவின்படி இதற்கான பணிகளை, திருச்சி மண்டல நீர்வளத் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க

செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட 15 டன் வாழைப் பழங்கள் அழிப்பு!

நெற்பயிர் வயல் வரப்பில் பயறு வகை: மகசூலை அதிகரித்து, மன்வளத்தை கூட்டும்

English Summary: Cauvery water will be available for the cultivation of Kuruvai next year!
Published on: 31 October 2021, 08:05 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now