News

Saturday, 12 June 2021 07:34 AM , by: Daisy Rose Mary

வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டத்தின் துணை திட்டம் மூலம் விவசாயிகளை மேம்படுத்த, பல்வேறு மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதி வழங்கியுள்ளது. இதில் 2014-15ம் ஆண்டு முதல் 2020-21ம் ஆண்டு வரை தமிழகத்துக்கு ரூ.421.65 கோடியை வேளாண் கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலன் துறை வழங்கியுள்ளது.

பண்ணை இயந்திரமயமாக்கல் திட்டம்

வேளாண் உபகரணங்கள் வாடகை மையங்கள், வேளாண் இயந்திர வங்கி, ஹை-டெக் மையங்கள், பல மாநிலங்களுக்கு வேளாண் இயந்திரங்களை வழங்குவது போன்ற நடவடிக்கைகள் பண்ணை இயந்திரமயமாக்கல் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகின்றன.

நிலங்களின் பயன்பாடு, நீர் வளங்கள், வேலை ஆட்கள், விதைகள், உரங்கள், பூச்சிகொல்லி மருந்துகள் போன்றவற்றை திறம்பட பயன்படுத்தி, வேளாண் தொழிலை லாபகரமாக மாற்றுவதிலும், கிராமப்புற இளைஞர்களுக்கு ஈர்ப்பான தொழிலாக மாற்றுவதிலும் இயந்திரமயமாக்கல் முக்கிய பங்காற்றுகிறது. வேளாண் துறையின் ஒருங்கிணைந்த வளர்ச்சியில், இயந்திரமயமாக்கல் முக்கியமான அம்சமாக உள்ளது. ஒருங்கிணைந்த வேளாண் இயந்திரமயமாக்கல் வளர்ச்சிக்கு, நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய வேளாண் இயந்திரங்கள் தேவை.

தமிழகத்துக்கு ரூ.21.74 கோடி

2014-15ம் ஆண்டு முதல் 2020-21ம் ஆண்டு வரை தமிழகத்துக்கு ரூ.421.65 கோடியை வேளாண் கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலத் துறை வழங்கியுள்ளது. 2021-22ம் நிதியாண்டில் முதல் தவணையாக ரூ.21.74 கோடி வேளாண் இயந்திரமயமாக்கல் துணை திட்டத்தின் கீழ் வழங்கபட்டுள்ளது. இதன் மூலம் 259 வேளாண் இயந்திரங்கள் மற்றும் சாதனங்கள் வழங்கப்படும். 115 வேளாண் கருவிகள் வாடகை மையங்கள் அமைக்கப்படும். 10 ஹைடெக் மையங்கள் மற்றும் 100 விவசாய இயந்திர வங்கிகள் கிராம அளவில் அமைக்கப்படும்.

மேலும் படிக்க....

கல்லணையில் ரூ. 1036 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்புப் பணிகள் - முதலமைச்சர் ஆய்வு!!

நெல்லுக்கான அடிப்படை ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.72 உயர்வு! விவசாயிகள் மகிழ்ச்சி!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)