News

Friday, 05 March 2021 12:55 PM , by: Elavarse Sivakumar

Credit : India TV News

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் வரும் 7ம் தேதி ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

05.03.21 முதல் 06.03.21 வரை (From 05.03.21 to 06.03.21)

இன்றும் நாளையும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

வானிலை முன்னறிவிப்பு (Weather Forecast)

07.03.21 முதல் 09.03.21 வரை

தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும், வறண்ட வானிலையே நிலவும்.

சென்னை (Chennai)

சென்னையைப் பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும்.

வெப்பநிலை (Temperature)

அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸையும் ஒட்டியே இருக்கும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை (Warning to fishermen)

மீனவர்களுக்கு எந்தவித எச்சரிக்கையும் இல்லை.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை

எனினும், கோடை வெயிலின் தாக்கம் தற்போதே அதிகரிக்கத் தொடங்கிவிட்டதால், மக்கள் சற்று விழிப்புடன் இருக்க வேண்டும்.

மதிய வேளையில் வெளியில் செல்வதைத் தடுத்தால், பல நோய்களுக்கு ஆளாகாமல் தவிர்த்துக்கொள்ளலாம்.

மேலும் படிக்க...

ஜீவாமிர்தம் தயாரிப்பது எப்படி?

TNAUவின் மாதாந்திர நேரடி அங்கக வேளாண்மை பயிற்சி- அடுத்த மாதம் முதல் தொடங்குகிறது!

கலப்பு பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்துவதால் என்ன ஆபத்து?

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)