சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 24 July, 2022 8:26 AM IST
Chance of rain today and tomorrow!

தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில், இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில், இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே விவசாயிகள் தங்கள் நெல் உள்ளிட்ட தானிய மூட்டைகளைப் பாதுகாப்பதற்கு ஏற்ப தகுந்த ஏற்பாடுகளைச் செய்து கொள்ளுமாறு வேளாண்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

மிதமான மழை

இது குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், இன்றும், நாளையும், ஓரிரு இடங்களில், மிதமான மழை பெய்யக் கூடும்.நாளை மறுதினம் வட கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

27ம் தேதி 

வரும் 27ம் தேதி, நீலகிரி, கோவை, சேலம், திருச்சி, மதுரை, துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

நாளை மற்றும் நாளை மறுதினம், தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய வட கடலோரப் பகுதிகளில், சூறாவளிக் காற்று மணிக்கு 40 - 60 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும். இந்நாட்களில் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அறிவுறுத்தல்

எனவே விவசாயிகள் தங்கள் நெல் உள்ளிட்ட தானிய மூட்டைகளைப் பாதுகாப்பதற்கு ஏற்ப தகுந்த ஏற்பாடுகளைச் செய்து கொள்ளுமாறு வேளாண்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் படிக்க...

விமானத்தில் பயணித்த பெற்றோர்- இன்ப அதிர்ச்சி அளித்த மகன்!

சென்னை to மாமல்லபுரம்- இலவச பேருந்து சேவை!

English Summary: Chance of rain today and tomorrow!
Published on: 24 July 2022, 08:26 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now