மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 17 April, 2022 4:17 PM IST
Rain With Thunder and Lightning....

இன்றும், நாளையும் தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சில நாட்களாக மழை பெய்து வருகிறது. 

பல இடங்களில் இடி மின்னலுடன் அவ்வப்போது கனமழை பெய்யும். இதனால் பொதுமக்கள் கோடை வெயிலில் இருந்து தப்பித்து வருகின்றனர்.

லட்சத்தீவு மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் நேற்று மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

பரவலாக மழை:

அதன்படி, திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான நேதாஜி நகர், புதுநகர், ஜனதாபுரம், செட்டியப்பனூர் உள்ளிட்ட பகுதிகளில் 1 மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. மழையில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது.

கடும் வெயிலால் பாதிக்கப்பட்ட மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் பகுதியில் பலத்த மழை பெய்தது. மணலூர்பேட்டை, திருப்பாலபந்தல், லவாப்பேட்டை பகுதிகளில் நேற்று இரவு இடி மின்னலுடன் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. இது தவிர, சில மாவட்டங்களுடன் சேர்த்து தமிழகத்திலும் பரவலாக மழை பெய்தது.

நாளை, நாளை மறுநாள்:

தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை, ஈரோடு, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை (ஏப்ரல் 19) லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 20ஆம் தேதி தமிழகத்தின் கடலோரப் பகுதிகள், மேற்குத் தொடர்ச்சி மலைகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும்.

சென்னையில் எப்படி:

சென்னையை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்சமாக 28 டிகிரி செல்சியஸ் வரை லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க:

கடலோர மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு!

8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு! மீனவர்களுக்கு எச்சரிக்கை!

English Summary: Chance of rain With thunder and lightning in Tamil Nadu!
Published on: 17 April 2022, 04:17 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now