1. செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

Deiva Bindhiya
Deiva Bindhiya
Chance of rain again in Tamil Nadu! Meteorological Center Announcement!

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று (14-02-2022) தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில்மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு அளித்துள்ளது.

மேலும் நாளை (15ஆம் தேதி) மற்றும் நாளை மறுநாள் (16ஆம் தேதி) தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் 17-02-2022 மற்றும் 18-02-2022 ஆகிய தேதிகளில் தமிழகம், மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்ற மகிழ்ச்சியான தகவலை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தமட்டு அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என்பது குறிப்பிடதக்கது.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதும் இல்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

மேலும் படிக்க:

EPFO: PF கணக்கில் பென்ஷன் PPO நம்பர் தெரியவில்லையா? இதோ வழி!

மீண்டும் நாட்டிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் 54 சீன செயலிகளுக்கு, இந்திய அரசு தடை!

English Summary: Chance of rain again in Tamil Nadu! Meteorological Center Announcement! Published on: 14 February 2022, 05:03 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.