News

Saturday, 11 September 2021 12:08 AM , by: T. Vigneshwaran

Mk Stalin TN Assembly

திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் திருமண மண்டபத்தில் இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஒருகால பூஜை திட்டத்தின் கீழ் 12,959 கோயில்களில் பணிபுரிவோருக்கு மாதம் ரூ.1000 ஊக்கத்தொகை தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்வில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் சேகர் பாபு என்று அழைப்பதை விட செயல் பாபு என்று அழைப்பது பொருத்தமாக இருக்கும் என்றும் சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட ஒரு திட்டம் கூட்டத் தொடர் முடியும் முன்பே அமலுக்கு வருவது இந்த திட்டம் தான் என்றும் கூறினார்.

24 மணி நேரமும் செயல்படுகிற அமைச்சராக சேகர்பாபு உள்ளார். கோயில் நிலங்களும், சொத்துக்களும் மீட்கப்பட்டு வருகின்றன. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டம் செயல்வடிவம் பெற்றுள்ளதாகவும் தமிழில் அர்ச்சனை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு 120 அறிவிப்புகளை அமைச்சர் சேகர்பாபு சட்டமன்றத்தில் வெளியிட்டுள்ளார். அறநிலையத்துறை சார்பில் கல்லூரிகள் தொடங்கப்பட உள்ள நிலையில் அறநிலையத் துறையின் பொற்காலம் வரவுள்ளது.

அர்ச்சகர்களுக்கு மாத ஊக்கத் தொகையாகயால் சுமார் 13 ஆயிரம் குடும்பங்கள் பயன் பெரும். சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை படிப்படியாக நிறைவேற்ற நடவடிக்கை செயல்படுத்தப்படும். திட்டங்கள் செயல்படுவதை மாதம்தோறும் நானே கண்காணிப்பேன் என்றும் அனைத்து துறைகளையும் முந்திக் கொண்டு செயல்பட்டு வருகிறார் சேகர் பாபு முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டார்.

மேலும் படிக்க:

தங்கம் விலை: ஒரே நாளில் ரூ. 144 உயர்ந்த தங்கம் விலை!!

தினமும் காலையில் ஓமம் தண்ணீர் குடிக்கவும்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)