சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 14 April, 2022 2:27 PM IST
Cholingar: Rope Car Test Run Begins!

மலைக்கோவில்களுக்குச் செல்ல எளிமையாக இருக்கும் வழிதான் இந்த ரோப் கார்.  அடிவாரத்தில் இருந்து மலையின் உச்சிப் பகுதியில் உள்ள கோவிலுக்கு நேராகச் செல்லும் வகையில் இருக்கும் கார், ரோப் கார் ஆகும்.  இது இப்பொழுது சோளிங்கர் கோவிலில் அமைக்கப்பட்டுள்ளது.

சோளிங்கர் ரோப் கார் திட்டம் கடந்த 2009-ஆம் ஆண்டில் ரூ. 10 கோடி மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டப்பட்டது. ரோப் கார் பணிகள் 12 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் திட்டப் பணிகள் தற்பொழுது நிறைவு பெற்றுச் சோதனை ஓட்டம் இன்று தொடங்கப்பட்டது.

தற்போது, மலை உச்சியில் உள்ள கோயிலுக்குப் பக்தர்கள் 1,305 படிகள் ஏறிச் செல்ல இருந்த நிலையில் நேரடியாகச் செல்லும் வகையில் இவ்வசதி அமைக்கப்பட்டுள்ளது. 8.26 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள ரோப் கார் வசதி, மலையடிவாரத்துடன் இணைக்கப்பட்டது.

ரோப் காரில் எட்டு கேபின்கள் இருக்கின்றன. நான்கு அறைகள் மேலே செல்லும், மீதமுள்ளவை ஒரே நேரத்தில் கீழே நகரும் வகையில் அமைக்கப்படுள்ளன. ஒவ்வொரு அறையிலும் நான்கு பேர் பயணிக்கலாம். அதாவது ஒரே நேரத்தில் 16 பேர் மேலே செல்லவும் மற்றும் 16 பேர் கீழே இறங்கவும் முடியும்.

சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் வகையிலும், வருமானத்தை அதிகரிக்கும் வகையிலும் இது இருக்கின்றது.  அதோடு, மக்களைப் பெரிதும் ஈர்க்கும் விதமாகவும் இந்த ரோப் கார் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. 

தமிழ் நாட்டின் சுற்றுலாத்துறை, சுற்றுலாத்தலங்களைப் புதுப்பிப்பது, புதிய திட்டங்களைக் கொண்டு வருவது, மக்களுக்கு ஏற்றவாறு வசதிகளைச் செய்வது முதலான பல திட்டங்களைக் கொண்டுவரும் செயலகளைச் செய்து வருகின்றது.  அந்த வகையில் ஒன்றாக இந்த ரோப் கார் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

ரோப் கார் வசதி மக்களிடையே பெரிதும் ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  மேலும் ரோப் கார் பயன்பாட்டுக்கு வந்ததால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதில் பயணிக்க என்றே மக்கள் வருகை தர வாய்ப்பு உள்ளது எனவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  இது மூலமாக சுற்றுலாத்துறைக்கு வருமானம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது எனக் கூறப்படுகிறது. 

இந்நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி, மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க...

ராமேஸ்வரம் கோவிலில் வேலைவாய்ப்பு - ரூ.58,000 சம்பளம்!

IRCTC இரயில் டிக்கெட் முன்பதிவு: மாதம் ரூ.80000 சம்பாதிக்கலாம்!

English Summary: Cholingar: Rope Car Test Run Begins!
Published on: 14 April 2022, 02:27 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now