நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 27 May, 2023 11:40 AM IST
Chromium in drinking water! Livelihood affected in Hosur!!

ஓசூர் வார்டு 18ல் உள்ள நிலத்தடி நீரில் குரோமியம் நிறைந்து காணப்படுகிறது. எனவே, குடிநீர் பயன்படுத்துவதற்கு ஏற்றதாக இல்லை. இது குறித்த கூடுதல் தகவல்களை இப்பதிவில் பார்க்கலாம்.

ஏப்ரல் 7 ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கையில், 'நிலத்தடி நீர் மாசுபட்டதாக நேதாஜி நகர் பகுதிவாசிகள் கூறுகின்றனர். தொழில்துறை அலகுகளை குற்றம் சாட்டுகின்றனர். மேலும் ஓசூர் வார்டு 18 ல் உள்ளவர்களுக்குத் தோல் ஒவ்வாமை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓசூர் வார்டு 18ல் உள்ள நேதாஜி நகரில் உள்ள நிலத்தடி நீரில் குரோமியம் கலந்திருப்பதாகவும், பயன்படுத்துவதற்கு தகுதியற்றதாக இருப்பதாகவும் ஓசூர் மாநகராட்சி நடத்திய முதற்கட்ட சோதனை முடிவு தெரியவந்துள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: இப்பகுதிக்கு தற்காலிகமாக டேங்கர் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு, ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தில் இருந்து தண்ணீர் எடுக்க, 30 லட்சம் ரூபாய் செலவில் குழாய் பதிக்கப்பட்டது.

ஏப்ரல் 7ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கையில், 'நிலத்தடி நீர் மாசுபட்டதாக நேதாஜி நகர் பகுதிவாசிகள் கூறுகின்றனர். தொழிற்சாலைகள் மீது பழி சுமத்துகின்றனர். இதைத் தொடர்ந்து, எச்எம்சி ஏப்ரல் 11 ஆம் தேதி 15 இடங்களில் (இரண்டு எச்எம்சி போர்வெல்கள் மற்றும் 13 தனிப்பட்ட போர்வெல்கள்) தண்ணீர் மாதிரிகளை சேகரித்து கோயம்புத்தூரில் உள்ள தலைமை நீர் ஆய்வாளர் ஆய்வகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பியது.

HMC கமிஷனர் சினேகா குறிப்பிடுகையில், அதிகாரபூர்வ நீர் பரிசோதனை முடிவை இன்னும் பெறவில்லை எனக் கூறப்படுகிறது. ஆனால் மூன்று வாரங்களுக்கு முன்பு ஒரு ஆரம்ப மற்றும் அதிகாரப்பூர்வமற்ற அறிக்கை கிடைத்த நிலையில், அதில் குரோமியம் நிலத்தடி நீரில் காணப்படுவதாகவும், எனவே அதை எந்த நோக்கத்திற்கும் பயன்படுத்த முடியாது என்றும் கூறப்படுகிறது.

ஒரு சில வாரங்களுக்கு தண்ணீர் டேங்கர் மூலம் எச்எம்சி தண்ணீரைப் பெறும் அந்த பகுதிக்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பின்னர் ரூ.30 லட்சம் மதிப்பில் 2,200 மீட்டருக்கு குழாய் பதிக்கப்படும். இதற்கான டெண்டர் விடப்பட்டு ஜூன் 9ம் தேதி ஏலம் திறக்கப்படும் என சினேகா தெரிவித்துள்ளார். ஓசூரில் உள்ள TNPCB அலுவலகத்திற்கு அதிகாரப்பூர்வமற்ற அறிக்கையை அனுப்பியதாக சினேகா மேலும் கூறினார். அதிகாரப்பூர்வ அறிக்கை TNPCB க்கும் அனுப்பப்படும், அதன் அடிப்படையில் அவர்கள் மாசுபாட்டிற்கான காரணத்தைக் கண்டறியும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க

கால்வாய்களை தூர்வார கன்னியாகுமரி விவசாயிகள் கோரிக்கை!

நாட்டிலேயே சிறந்த நகரம்! கோவைக்கு அடிச்சது ஜாக்பாட்!!

English Summary: Chromium in drinking water! Livelihood affected in Hosur!!
Published on: 27 May 2023, 11:32 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now