நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 2 March, 2022 7:14 PM IST

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் மே 5ம் தேதியும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மே 6 ம் தேதியும் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் கடந்த 2 ஆண்டுகளாக தமிழக மக்கள் பெரும் பாதிப்பைச் சந்தித்தனர். பள்ளிகள் மூடப்பட்டதால், பொதுத்தேர்வுகள் நடத்தப்பட வில்லை. 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் ஆல் பாஸ் செய்யப்பட்டனர்.

அரசு எடுத்த தீவிர முயற்சியின் பயனாக, கொரோன வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்ததையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் முதல் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், இந்த ஆண்டு 10 மற்றும் 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு எப்போதுத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியப் பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாவது:

பொதுத் தேர்வு

பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வானது ஏப்ரல் 25 முதல் மே 2ம் தேதி வரை நடக்கும். பிளஸ் 2 மாணவர்களுக்கு மே 5 முதல் மே 28 வரையும், பிளஸ் 1 மாணவர்களுக்கு மே 9 முதல் மே 31 வரையிலும்,10ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6 முதல் மே 30 வரையிலும் பொதுத்தேர்வு நடக்கும்.

பிளஸ் 2 மாணவர்களுக்கு ஜூன் 23ம் தேதியும், பிளஸ் 1க்கு ஜூன் 7ம் தேதியும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 17 ம் தேதியும் தேர்வு முடிவுகளை வெளியிடத் திட்டமிட்டுள்ளோம். பொதுத்தேர்வு முடிந்த பின்னர் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூன் 20ம் தேதியும், பிளஸ் 1 மாணவர்களுக்கு ஜூன் 24லும் வகுப்புகள் துவங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

எந்தெந்த தேதியில் என்னென்ன பரீட்சை என்பதை tnschools.gov.in என்ற இணைய தளத்தில் மாணவர்களுடைய பார்வைக்கு வெளியிடப்படும். அது மட்டுமின்றி tge.tn.gov.in என்ற இணைய தளத்திலும் வெளியிடப்படும் என்றார்.

தேர்வுகள் முடிந்தபிறகு 2022-2023 பள்ளி கல்வி ஆண்டுக்காக 1 முதல் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான வழக்கமான வகுப்புகள் 20.6.22 முதல் தொடங்கும். 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் 24.6.2022 முதல் தொடங்க உள்ளது. பிளஸ்-1 வகுப்புகளுக்கு ரிவி‌ஷன் டெஸ்ட் இப்போது முதல் பொதுத்தேர்வு வரை நடைபெறும்.

மேலும் படிக்க...

சர்க்கரை ரொம்பப் பிடிக்குமா? புற்றுநோய்க்கு வாய்ப்பு அதிகம்!

இரவில் தூங்கும் முன்பு 2 கிராம்பு+Hot water- ஆச்சர்யப்படுத்தும் நன்மைகள்!

English Summary: Class 12 and 10 general examinations in Tamil Nadu begin on May 5 and 6 -
Published on: 02 March 2022, 07:13 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now