மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 18 December, 2020 4:12 PM IST
Credit :Civils daily

வேளாண் வணிகத் துறை மூலம் உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி திட்டத்தை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கோவை மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி தெரிவித்துள்ளாா்.

விவசாயிகள் உற்பத்தியோடு நின்றுவிடாமல் விற்பனையிலும் ஈடுபடும் வகையில் ஆயிரம் விவசாயிகள் உறுப்பினா்களாக இணைந்து உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இந்நிறுவனங்கள் தொழில் தொடங்குவதற்கு கடனுதவி அளிக்கும் விதமாக இடைநிலை மூலதன உதவி, கடன் உத்தரவாதம், சுழல்நிதி வழங்கும் திட்டங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.

உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள் துவங்கி மூலதன பங்களிப்பை அதிகரிப்பதன் மூலம் ஒவ்வொரு உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களுக்கும் ரூ.10 லட்சம் வரை இடைநிலை மூலதன கடன் வழங்கப்படும். இந்நிதியை உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள் விளைபொருள்களை சந்தைப்படுத்துவதுக்கு பயன்படுத்திகொள்ளலாம்.

மிளகாய் பொடியில், கழுதை மலம் கலப்படம்- மக்களே உஷார்!

ஐந்தாண்டுகள் கழித்து இத்தொகையினை திரும்பி செலுத்தினால் போதுமானது. இதற்கு ஆண்டுக்கு 4 சதவீதம் வட்டி வசூலிக்கப்படும். தவிர உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள் மூலம் தொழில் தொடங்க வங்கியில் ரூ.1 கோடி வரை கடன் பெறுவதற்கு 50 சதவீத உத்தரவாதத்தை தமிழக அரசே ஏற்றுக்கொள்ளும். மேலும் உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களுக்கு நிதி நிறுவனங்கள் வழங்கும் கடனுக்கு 12 முதல் 14 சதவீத வட்டி வசூலிக்கப்படுகிறது. இதனை 8 முதல் 9 சதவீதமாக குறைக்கும் விதமாக அரசின் பங்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களுக்கு சலுகையுடன் கூடிய கடன் வழங்கப்படும்.

கரும்பு விவசாயிகளுக்கு ரூ.3,500 கோடி நிதியுதவி - அமைச்சரவை ஒப்புதல்!!

இத்திட்டத்தை செயல்படுத்த வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை, நாப்கிசான் நிறுவனத்திடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களுக்கு மூலதன உதவி மற்றும் சலுகையுடன் கூடிய கடன் வழங்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட வேளாண்மை துணை இயக்குநா் (வேளாண்மை வணிகம்) அலுவலகத்தை தொடா்புகொண்டு பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சொட்டுநீர் பாசன குழி அமைக்க விவசாயிகளுக்கு மானியம் - விண்ணப்பிக்க அழைப்பு!!

English Summary: Coimbatore collector request Farmers to avail the financial assistance scheme provided by the Department of Agri-Commerce to FBOs
Published on: 18 December 2020, 04:12 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now