1. செய்திகள்

சொட்டுநீர் பாசன குழி அமைக்க விவசாயிகளுக்கு மானியம் - விண்ணப்பிக்க அழைப்பு!!

Daisy Rose Mary
Daisy Rose Mary
Credit : agrifarmideas

சொட்டுநீர் பாசனத்துக்கு குழி எடுப்பதற்கு ரூ.6 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படுவதால், இதனை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர், வெளியிட்டுள்ள அறிக்கை: பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டத்தில், தோட்டக்கலை பயிர்களுக்கு, சொட்டுநீர் பாசனம் அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு, 100 சதவீதமும், இதர விவசாயிகளுக்கு, 75 சதவீதமும் மானியம் வழங்கப்படுகிறது. சொட்டுநீர் பாசனத்தில், தேவையான பிரதான குழாய்கள், துணை பிரதான குழாய்கள் பதிக்க, 1.5 முதல், 2 அடி அகலம், 2 அடி ஆழத்தில், குழி எடுக்க வேண்டி உள்ளது. 

கரும்பு விவசாயிகளுக்கு ரூ.3,500 கோடி நிதியுதவி - அமைச்சரவை ஒப்புதல்!!

இதற்காக விவசாயிகள் சிரமப்பட்டு வரும் நிலையில், விவசாயிகளுக்கு உதவும் விதமாக, சொட்டு நீர் பாசனம் அமைக்க, குழி எடுப்பதற்கு மானியம் வழங்கப்படுகிறது. ஹெக்டேருக்கு, 3,000 ரூபாய் வீதம், ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக, 2 ஹெக்டேருக்கு மானியம் வழங்கப்படுகிறது.

குறைந்த செலவில் அதிக லாபம் ஈட்டித் தரும் சிறு தானியங்கள்!

சொட்டுநீர் பாசனத்துக்கு விண்ணப்பிக்கும் போதே, குழி எடுப்பதற்கான மானியத்துக்கும் சேர்த்து விண்ணப்பிக்கலாம். சொட்டுநீர் பாசனத்தில் பயன் பெற, தோட்டக்கலைத்துறையில் பதிவு செய்து, விண்ணப்பிக்கலாம். இது தவிர, அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்திலும் விண்ணப்பம் அளிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

மிளகாய் பொடியில், கழுதை மலம் கலப்படம்- மக்களே உஷார்!

 

English Summary: Subsidy for farmers to set up drip irrigation pit farmers are invited to get benefit... Published on: 18 December 2020, 09:29 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.