மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 19 February, 2023 12:14 PM IST
Consultation meeting at Dharmapuri Collectorate regarding upgradation of agricultural products

தர்மபுரி ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று, குறு, சிறு தொழில் நிறுவனங்கள் மற்றும் விவசாய உற்பத்திகளை தரம் உயர்த்துவது குறித்த, அரசியல் கட்சியினர் மற்றும் விவசாய சங்க பிரதிகளின் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.

கடந்த புதன்கிழமை ”கள ஆய்வில் முதல்வர்திட்டத்தின் சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களின் தொழில்துறை, விவசாய சங்கப் பிரதிநிதிகள், மகளிர் சுய உதவிக் குழுவினர் ஆகியோருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தருமபுரி மாவட்டத்தின் சார்பில் பங்கேற்றவர்கள், மாவட்டத்தில் சிறுதானிய உற்பத்தியாளர், ஏற்றுமதியாளர் மற்றும் விற்பனையாளர்களுக்கான தொடர்பு ஏற்படுத்த தேசிய அளவில் வாங்குபவர் மற்றும் விற்பவர் சந்திப்புக் கூட்டம் நடத்திட உதவி செய்திட வேண்டும், முதல்நிலை சிறுதானியம் பதப்படுத்தும் மையம் மற்றும் சேமிப்புக் கிடங்கு அமைத்துத் தர வேண்டும். வேளாண்மை தொடர்பான செய்திக்களுக்காக “விவசாயிகள் பண்பலைநிலையம் அமைத்திட வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர்.

இதுகுறித்து விவாதிக்கும் வகையிலும் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி தலைமையில் நேற்று குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள், விவசாய உற்பத்தி பொருட்களை தரம் உயர்த்துவது குறித்து ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) தீபனாவிஸ்வேஸ்வரி, மாநில விவசாய சங்க தலைவர் சின்னசாமி, வேளாண்மை இணை இயக்குநர் க.விஜயா, பொது மேலாளர் மாவட்ட தொழில் மையம் கார்த்திகைவாசன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கண்ணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் வேலுசாமி உட்பட தொடர்புடைய அரசு அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

இதில், தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமை வகித்து பேசியதாவது: மாவட்ட பொதுமக்களுக்கு, வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கு மத்திய, மாநில அரசுகள், பல்வேறு மானியங்களை வழங்கி வருகிறது. இதை பயன்படுத்தி, மாவட்டத்தில் குறு, சிறு தொழில் செய்வோர் தங்களது தொழில் நிறுவனங்களை மேம்படுத்தி, தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். தொழில் மேம்பாட்டில் உள்ள பிரச்னைகளை அகற்ற, மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது. விளைபொருட்களை, மதிப்பு கூட்டு பொருளாக தரம் உயர்த்தி விற்பனை செய்ய விவசாயிகள் முன்வர வேண்டும். 

இதற்காக அரசு வழங்கும் மானியம், பயிற்சி குறித்து, விவசாயிகள் தங்கள் பகுதிகளிலுள்ள வேளாண் அலுவலகங்களில் அறியலாம். தமிழகத்தில், சிறு தானிய உற்பத்தியில், தர்மபுரி மாவட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, மாவட்ட விவசாயிகள் இதை பயன்படுத்தி, தங்களது வாழ்வாதாரத்தை உயர்த்தி, விவசாய தொழிலாளர்களுக்கு, அதிகளவில் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என குறிப்பிட்டார்.

மேலும் படிக்க: 

ஓசூர் சிப்காட் பகுதியில் ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலையை திறந்து வைத்த முதல்வர்

100 நாள் வேலை உறுதித்திட்டம் பலிகடா-எம்பி ராகுல் காந்தி கண்டனம்

English Summary: Consultation meeting at Dharmapuri Collectorate regarding upgradation of agricultural products
Published on: 19 February 2023, 12:14 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now