News

Tuesday, 30 August 2022 03:39 PM , by: Elavarse Sivakumar

தொடர் கனமழை காரணமாக, கேரளாவில், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு கிராமங்களிலும் கிராமங்களிலும் தண்ணீர் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

தொடர் கனமழை காரணமாக கேளராவின் பல்வேறு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கொச்சி நகரின் பல பகுதிகளிலும், ஆலப்புழா, பத்தனம்திட்டா, எர்ணாகுளம் மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் உள்ள சில நகரங்கள் மற்றும் கிராமங்களிலும் தண்ணீர் தேங்கியுள்ளது.
இதனால் அங்கு வசிக்கும் மக்களின் வாழ்வாதாரம் முடங்கியுள்ளது.

வெள்ள அபாய எச்சரிக்கை

பாதக்கப்பட்ட பகுதிகளில் வசித்து வருபவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிகை விடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விடுமுறை

ள்ளம் பாதித்த தாலுகாக்களில் உள்ள பள்ளிகள் உள்பட கல்வி நிறுவனங்களுக்கு மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்துள்ளனர். ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. எர்ணாகுளம், ஆலப்புழா மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யும் என்று கேரள பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

5 பேர் புதைந்து பலி

முன்னதாக இடுக்கி மாவட்டம் தொடுபுழா தாலுகாவில் உள்ள குடையாத்தூர் பகுதியில் நிலச்சரிவால் வீடு ஒன்று மண்ணில் புதைந்தது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தேசிய பேரீடர் மீட்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க...

தமிழக இளைஞர்களுக்கு வேலை- சென்னையில் சிறப்பு முகாம்!

வெறும் 750 ரூபாய்க்கு சமையல் எரிவாயு சிலிண்டர் கிடைக்கும்!

 

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)