மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 9 April, 2021 11:40 AM IST

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், இதுவரை இல்லாத அளவிற்கு புதிய உச்சமாக ஓரே நாளில் 1.31 லட்சம் பேருக்கு நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு - Corona 2-nd Wave 

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா தொற்று தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல்வேறு கட்ட நடவடிக்கையின் காரணமாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மெல்ல மெல்ல குறைய தொடங்கியதை, இதைத்தொடர்ந்து கொரோனா காரணமாக விதிக்கப்பட்ட பொது முடக்கம் பல்வேறு நிலைகளாகத் தளர்த்தப்பட்டு வந்தன.

ஒரே நாளில் 1. 31 லட்சம் பேர் பாதிப்பு - India records its Highest 

இந்நிலையில், தற்போது மீண்டும் இந்தியாவில் கொரோவின் பாதிப்பின் 2-வது அலை வீசத் தொடங்கியுள்ளது. இதனால் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் புதிய உச்சமாகக் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1 லட்சத்து 31 ஆயிரத்து 968 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை வெளியிட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 780- பேர் உயிரிழந்துள்ளனர். 61 ஆயிரத்து 899 பேர் குணமடைந்துள்ளனர்.

மொத்த பாதிப்பு எண்ணிக்கை

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளானோர் எண்ணிக்கை 1 கோடியே 30 லட்சத்து 60 ஆயிரத்து 542 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவில் இருந்து இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1 கோடியே 19 லட்சத்து 13 ஆயிரத்து 292 ஆக உள்ளது. தொற்று பாதிப்புடன் 9 லட்சத்து 79 ஆயிரத்து 608- பேர் நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.கொரோனாவுக்கு இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 67 ஆயிரத்து 642- ஆக உள்ளது.

தடுப்பூசி

இந்நிலையில், நாட்டில் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் எண்ணிக்கை 9 கோடியே 43 லட்சத்து 34 ஆயிரத்து 262 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் இன்று காலை நிலவரப்படி உலகலவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 கோடியே 45 லட்சத்து 28 ஆயிரத்து 282 பேராக அதிகரித்துள்ளது.

மேலும் படிக்க....

கொரோனா 2-வது அலை : மீண்டும் சாவலான நிலை - பிரதமர் மோடி கவலை!!!

English Summary: Corona 2nd wave: India records its highest corona case Over 1 lakh 31 thousand people affected in one day
Published on: 09 April 2021, 11:40 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now