News

Friday, 15 October 2021 06:40 PM , by: R. Balakrishnan

Corona Mortality

உலக அளவில் கோவிட் தொற்றால் ஏற்பட்ட உயிரிழப்போர் எண்ணிக்கை கடந்த ஓராண்டில் இல்லாத அளவுக்கு கடந்த வாரத்தில் குறைந்துள்ளது' என, உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.

உயிரிழப்பு குறைவு

உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியாசிஸ், வாராந்திர ஆய்வு குறித்து நேற்று (அக்., 14) அளித்த பேட்டியில் தெரிவித்து உள்ளதாவது: உலக அளவில் கோவிட் (Covid-19) பெருந்தொற்றால் உயிரிழப்போர் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த வாரத்தில் உலக அளவில் 50 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். இது, கடந்த ஓராண்டில் ஒரு வாரத்தில் ஏற்பட்ட மிகக் குறைவான உயிரிழப்பு.

ஐரோப்பாவைத் தவிர்த்து உலகின் பல்வேறு நாடுகளிலும் கோவிட் தொற்றால் உயிரிழப்போர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஆனால் பல நாடுகள் தற்போது புதிதாக கோவிட் அலைகளையும், உயிரிழப்பையும் சந்தித்து வருகின்றன. குறிப்பாக, குறைவான அளவு தடுப்பூசி (Vaccine) செலுத்திய மக்கள் இருக்கும் நாடுகளில் உயிரிழப்பு அதிகரித்து உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க

மக்களே உஷார்: கொரோனா வைரஸ் போல மற்றொரு தொற்றுநோய்!

2 வயது குழந்தைக்கும் தடுப்பூசி போட அனுமதி அளித்தது மத்திய அரசு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)