மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 25 October, 2020 5:26 PM IST
Credit : Smart Food

இந்தியாவின் பாரம்பரிய சிறுதானியப் பயிர்களில் ஒன்றான, கேழ்வரகு (ராகி) கொல்லிமலைப் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

கேழ்வரகு சாகுபடி நடைபெறும் இடங்கள்:

இந்தியாவில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகத்தில் தான் கேழ்வரகு சாகுபடி அதிக அளவில் நடைபெறுகிறது. ஆந்திரா, ஒரிசா, குஜராத், மகாராஷ்டிரா, உத்திரப் பிரதேசம் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் மலைப்பகுதியில் (Hill Station) கேழ்வரகு சாகுபடி செய்யப்படுகிறது. இந்தியாவில் முழுநீள, அகல நிலப்பரப்பில், பயிரிடப்படும் ஊடுபயிர்களில் (intercrops), முக்கியமான சிறுதானியம் கேழ்வரகு.

பருவகாலம்:

செப்டம்பர் முதல் அக்டோபர் மற்றும் டிசம்பர் முதல் ஜனவரி வரையிலான காலமே கேழ்வரகை பயிர் செய்ய ஏற்றது. தற்போது கேழ்வரகு சாகுபடிக்கு ஏற்ற காலம் என்பதால், தம்மம்பட்டி அருகே கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள மலைப்பகுதி கிராமங்களான அடுக்கம், வேலிக்காடு, கீரைக்காடு உள்ளிட்ட பகுதிகளில், மானாவாரியாக சாகுபடி (Cultivation) செய்யப்பட்டு வருகிறது.

மகசூல்:

கேழ்வரகு, ஏக்கருக்கு 250 முதல் 300 கிலோ வரை மகசூல் (Yield) கிடைக்கும். உலர்ந்த கேழ்வரகை கதிரடித்து, புடைத்து, சுத்தப்படுத்திய பின்பு, விற்றால் 100 கிலோ மூட்டையை கிட்டத்தட்ட ரூ.4000 வரை விற்பனையாகும். கேழ்வரகுடன் உளுந்து, துவரை உள்ளிட்ட பயறு வகைப் பயிர்களை 8:2 விகிதத்தில், ஊடுபயிராகப் (Intercrops) பயிரிடுவதன் மூலம், அதிக மகசூலுடன், நல்ல வருமானமும் கிடைக்கும்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க...

நாமக்கல்லில் நவராத்திரியையொட்டி பூக்கள் விலை ‘கிடுகிடு’ உயர்வு

மரங்களை அடகு வைத்தால், விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன்! கேரளாவில் புதிய திட்டம்!

English Summary: Cultivation of traditional cereal cashew in Kollimalai!
Published on: 25 October 2020, 05:23 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now