நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 11 January, 2022 1:59 PM IST
Credit : Dailythanthi

தமிழகத்தில் அமலில் உள்ளக் கொரோனா ஊரடங்குக் கட்டுப்பாட்டு நெறிமுறைகளை வரும் ஜனவரி 31ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு  உத்தரவிட்டுள்ளது.

தொடரும் கொரோனா (Corona to continue)

உலக நாடுகளை உலுக்கி எடுத்துவரும் கொரோனா வைரஸ் தமிழகத்தில் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கியது. பின்னர் 2021ம் ஆண்டு மே மாதம் இரண்டாவது அலையாகப் பரவிய கொரோனா , டெல்டா, ஒமிக்ரான் என உருமாறியப் தொற்றுகளாக மாறி நம்மை அச்சுறுத்தி வருகிறது.

ஒமிக்ரானாக ஒருபுறம் மிரட்டிவருவதுடன், மறுபுறம் கொரோனா 3-வது அலையாகத் தற்போது, வேகமாகப் பரவி வருவதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை எச்சரித்து உள்ளது.

ஊரடங்குக் கட்டுப்பாடுகள் (Curfew controls)

கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கைத் தொடர்ந்து ஏறுமுகத்திலேயே உள்ளது. இதைத்தொடர்ந்துத் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், கடந்த 6ம் தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு உள்ளன. இரவு 10:00 முதல் அதிகாலை 5:00 மணி வரை, இரவு நேர ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

முதலமைச்சர் ஆலோசனை (Chief Minister's advice)

இந்நிலையில் மருத்துவ நிபுணர்கள் குழுவினர் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் முக்கிய ஆலோசனை நடத்தினார். இதையடுத்து முதல்வர் பின்வரும்  உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.

புதிய உத்தரவுகள் (New orders)

  • தமிழகத்தில் கொரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்குக் கட்டுப்பாடு, ஜனவரி 31 வரை நீட்டிக்கப்படுகிறது.

  • வழிபாட்டு தலங்கள் ஜனவரி. 14 முதல் 18 ம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. வழிபாட்டு தலங்களுக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதியில்லை.

  • வரும் 16-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

  • பொங்கல் பண்டிகையொட்டி வெளியூர்களுக்கு செல்லும் பேருந்தில் 75 சதவீத இருக்கைகளுடன் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

  • ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை தொடரும், அனுமதிக்கப்பட்ட இதர செயல்பாடுகளும் தொடரும்.

  • கொரோனா வழிபாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல், விதி மீறும் வணிக நிறுவனங்களை மூட மாவட்ட நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • பொதுமக்கள் அனைவரும் தவறால் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  • பொதுமக்கள் அத்தியாவசிய காரணங்களுக்காக மட்டும் வெளியே செல்ல வேண்டும்.

  • பொதுஇடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். தனி மனித இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்.

  • கொரோனாக் கட்டுப்பட்டு விதிமுறைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு விதி மீறும் நிறுவனங்கள், தனிநபர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

முழு ஊரடங்கு அமல்- சென்னையில் பஸ், ஆட்டோ, மெட்ரோ ரயில்கள் ஓடாது!

ஒமிக்ரான் வேகமாக குறையும்: அமெரிக்க அறிவியலாளர் நம்பிக்கை!

English Summary: Curfew restrictions extended to Jan. 31 - Shrines closed until Jan. 14-18!
Published on: 10 January 2022, 09:45 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now