News

Sunday, 09 January 2022 08:38 AM , by: Elavarse Sivakumar

Credit: Maalimalar

கொரோனா 3-வது அலைத் தமிழகத்தில் உச்சத்தைத் தொட்டு வரும் நிலையில், தினசரி பாதிப்பு 11 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

3-வது அலை (3rd wave)

கடந்த 2 ஆண்டுகளாக நம்மை ஆட்கொண்டுவரும் கொரோனா அரக்கன், இன்னும் முடிவுக்கு வரவில்லை. தற்போது 3-வது அலையாக வந்துகொண்டிருக்கிறார். ஒமிக்ரானைக் கண்டு மக்கள் ஓட்டம் பிடித்த நிலைநில், 3-வது அலையாக வலம் வரும் கொரோனா பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதிய உச்சம் (New peak)

அதிலும் இந்த வாரம் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரம் தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

புள்ளிவிபரங்கள்

அதன்படி, தமிழகத்தில் நேற்று ஒருநாளில் 1,39,253 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில், 10,978 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஜனவரி 7ம் தேதி 8,981 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், 8ம் தேதி 11 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

சென்னையில் தினசரி பாதிப்பு 5000-ஐ தாண்டி உள்ளது. ஜனவரி 8ம் தேதி 5098 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. செங்கல்பட்டில் 1332 பேருக்கும், கோவையில் 585 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 309 பேருக்கும், திருவள்ளூரில் 591 பேருக்கும், திருப்பூரில் 226 பேருக்கும், வேலூரில் 243 பேருக்கும், தூத்துக்குடியில் 202 பேருக்கும், திருச்சியில் 237 பேருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

ஒமிக்ரான் பாதிப்பு (Omicron vulnerability)

தமிழகத்தில் மேலும் 64 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த ஒமைக்ரான் பாதிப்பு 185 ஆக உயர்ந்துள்ளது. ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டோரில் 6 பேர் வெளிமாநிலத்தவர்கள்.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்தைக் கடந்தது

இதனிடையே கொரோனா 3- வது அலையில் இந்தியாவில் தினசரி கொரோனா எண்ணிக்கை நேற்று ஒரு லட்சத்தை கடந்து இருக்கிறது. முதல் அலையில் இந்த எண்ணிக்கையை எட்ட 120 நாட்கள் ஆனது. இரண்டாவது அலையில் இந்த எண்னிக்கை 50 நாட்களில் எட்டப்பட்டது.

27 மாநிலங்களில் (In 27 states)

இதற்கிடையில், அதிக அளவில் பரவக்கூடிய ஒமிக்ரானின் எண்ணிக்கை 3,000-ஐத் தாண்டியுள்ளது. 1,199 நோயாளிகளும் குணமடைந்துள்ளனர். தற்போது இந்தியாவில் ஒமிக்ரான் (Omicron) தொற்று 27 மாநிலங்களில் பரவி உள்ளது.

மேலும் படிக்க...

நாடு முழுவதும் இன்று முதல் சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி!

ஒமிக்ரான் வேகமாக குறையும்: அமெரிக்க அறிவியலாளர் நம்பிக்கை!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)