News

Saturday, 06 November 2021 01:40 PM , by: Elavarse Sivakumar

Credit : 1NewsNation

தென்கிழக்கு வங்கக்கடலில் வரும் 9ஆம் தேதி குறைந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்திற்கு எச்சரிக்கை (Warning to Tamil Nadu)

இதுகுறித்து இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:-

தென்கிழக்கு வங்கக்கடலில் வரும் 9ஆம் தேதி குறைந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். அது ஆழ்ந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவடைந்து தமிழகக் கடற்கரையை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக, தமிழ்நாட்டில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை (Heavy rain)

இதனிடையே சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் 9ம் தேதி வரை தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை (Chennai)

சென்னையை பொருத்தவரை, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரப் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (Depression area)

மேலும், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதன் ஓட்டிய பகுதிகளில் வரும் நவம்பர் 9ம் தேதி அன்று புதியதாகக் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலுக்குச் செல்ல வேண்டாம் (Do not go to sea)

இதனால் ஆந்திரா, கேரளா, கர்நாடகர கூடலோரப்பகுதிகளில் காற்று வீச இருப்பதால் மீனவர் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

கொள்முதல் நிலையங்களில் ஏக்கருக்கு 30 நெல் மூட்டைகள் மட்டுமே வாங்கப்படுவதால் விவசாயிகள் தவிப்பு!

மழைக்காலத்தில் பயிர்களை பாதுகாக்கும் சிறந்த வழிமுறைகள்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)