சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் International Carrot Day 2025: இன்று ஏன் 'சர்வதேச கேரட் தினம்' கொண்டாடப்படுகிறது? மேட்டூர் அணை நீருக்காக காத்திருக்கும் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 27 April, 2023 3:26 PM IST
Disagreement among the farmers on the matter of Kilpawani!

கீழ்பவானி திட்ட கால்வாய் (எல்பிபி) நவீனமயமாக்கல் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பு இருந்தும் விவசாயிகளிடையே கருத்து வேறுபாடு நீடிக்கிறது. இந்நிலையில், இத்திட்டம் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்த விவசாயிகளுக்கு மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. அமைச்சர் எஸ்.முத்துசாமி தலைமையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

மே 1ம் தேதி முதல் நவீனமயமாக்கல் பணிகள் தொடங்கவில்லை என்றால் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக விவசாயிகள் ஒருபக்கம் அறிவித்துள்ளனர்.இதற்கிடையில், இதற்கு அனுமதி வழங்கினால் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என மற்றொரு விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். திட்டம் ரத்து செய்யப்படவில்லை.

கீழ்பவானி ஆயக்காட்டு நில உரிமையாளர்கள் சங்க செயலாளர் கே.வி.பொன்னையன் கூறுகையில், ''எல்.பி.பி., வாய்க்கால், ஈரோடு கீழ்பவானி அணையில் (எல்.பி.டி.,) துவங்கி, திருப்பூர் வழியாக, கரூரில் முடிகிறது. 70 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கால்வாய் இன்னும் நவீனப்படுத்தப்படாமல் உள்ளது.

இதனால், ஆண்டுதோறும், கால்வாயில் தண்ணீர் திறக்கும்போது, பல இடங்களில் கசிவு ஏற்படுகிறது. கால்வாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்ய ஒவ்வொரு முறையும் 10 நாட்கள் தண்ணீர் நிறுத்தப்படுவதால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். இதை தவிர்க்க, கால்வாயை நவீனப்படுத்த வலியுறுத்தி வருகிறோம்,'' என்று கூறியுள்ளார்.

“இப்போது சென்னை உயர்நீதிமன்றம் இந்தத் திட்டப் பணிகளை மே 1 முதல் தொடங்கலாம் என்று உத்தரவிட்டுள்ளது. நாங்கள் செவ்வாய்கிழமை LBP அதிகாரிகளிடம் அவ்வாறு செய்யக் கோரி மனு அளித்தோம். பணிகள் தொடங்கவில்லை என்றால், மே 5 முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவோம்,'' எனக் கூறியுள்ளார்.

இதற்கிடையில், கீழ் பவானி பாசனப் பாதுகாப்பு இயக்கத்தின் அமைப்பாளர் எம்.ரவி கூறுகையில், "LLP கால்வாய் முழுவதும் கான்கிரீட் அமைக்கும் பணி மேற்கொள்ளப்படும். அப்படிச் செய்தால் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுவதோடு, ஏராளமான மரங்கள் அழிந்துவிடும். எனவே, இதை எதிர்த்து, அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்துகிறோம். இந்த திட்டத்தில் ஏற்கனவே உள்ள கான்கிரீட் கட்டமைப்புகளை மட்டும் புதுப்பித்து, புதிய கட்டமைப்புகளை உருவாக்காமல் இருந்தால் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. இதுகுறித்து அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டும்,'' என்று கூறியுள்ளார்.

LLP செயல் பொறியாளர் கண்ணன் கூறுகையில், ""மே 1ம் தேதி முதல் பணிகளை துவக்க திட்டமிட்டுள்ளோம். இத்திட்டத்தின் கீழ் கால்வாயில் எங்கும் கான்கிரீட் தளம் கட்டப்படாது, இது குறித்து கூட்டத்தில் விவசாயிகளிடம் விளக்குவோம்,'' என்றார். இந்த கால்வாயை நவீனப்படுத்துவதற்கு மாநில அரசு ஏற்கனவே 709 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

காரைக்காலில் முதல் முறையாக 2 ஏக்கரில் தினை சாகுபடி!

தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சம்! வறட்சியில் அல்லிகுளம் கிராமம்!!

English Summary: Disagreement among the farmers on the matter of Kilpawani!
Published on: 27 April 2023, 03:02 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now