மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 19 December, 2021 11:54 AM IST
Credit : Deccan Herald

மகளிர் குழுக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுத்த காசோலை (Cheque) பணமின்றித் திரும்பியதால், பெண்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர்.

நலத்திட்ட உதவி (Welfare assistance)

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில், கடந்த வாரம் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு சுழல் நிதி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று, திருவள்ளூர், ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும், 400க்கும் மேற்பட்ட மகளிர் குழுவினருக்கு, 105 கோடி ரூபாய் மதிப்பில் சுழல் நிதிக்கான காசோலைகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

காசோலை திரும்பியது (The check is returned)

சுய உதவிக்குழுவினருக்கு சுழல் நிதிக்கான காசோலைகளை, முதல்வரே நேரடியாக வழங்கினாலும், இதற்கு இன்னும் நிதி ஒதுக்காததால், மகளிர் திட்ட அலுவலர்கள், அந்த காசோலைகளை திரும்ப பெற்றுள்ளனர்.

திருவள்ளூர் நகராட்சி, பெரியகுப்பம், கார்த்திகை மகளிர் சுய உதவிக்குழுவினர், 5 லட்சம் ரூபாய்க்கு காசோலை பெற்றிருந்தனர்.
அக்குழுவினர், காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கிக்கு சென்று, முதலமைச்சர் வழங்கிய காசோலையை, தங்களது கணக்கில் வரவு வைக்கக் கோரினர்.

ஆனால், முதல்வர் வருகையால் சம்பிரதாயத்திற்காக 'செக்' வழங்கினோம். இன்னும் நிதி ஒதுக்கவில்லை. எனவே, மகளிர் திட்ட அதிகாரிகளிடம் காசோலையைத் திருப்பிக் கொடுத்து விடுங்கள்' என, வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால், அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.


இது குறித்து மகளிர் திட்ட அலுவலர்கள் கூறியதாவது:-

முதலமைச்சர் திடீர் வருகையால், தகுதி வாய்ந்த மகளிர் குழுவினரை உடனடியாக தேர்வு செய்ய முடியவில்லை. இதனால், அந்தந்த வங்கிகளில், தொடர்ந்து வரவு - செலவு நடத்தி வரும், குறிப்பிட்ட குழுவினரை தேர்வு செய்து, கடன் தொகை நிர்ணயித்து, 'செக்' வழங்கினோம்.வங்கி நடைமுறைப்படி, உரிய ஆவணம் பெற்றதும், விரைவில் மகளிர் குழுவினருக்கு ஒதுக்கிய சுழல் நிதி வழங்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

வங்கிக்கணக்கில் வரவு

திருவள்ளூர் ஆட்சியர் அல்பி ஜான் வர்கீஸிடம் கேட்டபோது, சம்பந்தப்பட்ட மகளிர் குழுவினருக்கு ஒதுக்கப்பட்ட பணம், அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு உள்ளது, வேறு எதுவும் பிரச்னையில்லை,'' என்றார்.

மேலும் படிக்க...

முதன் முதலாக சூரியனை தொட்டது அமெரிக்க விண்கலம்!

கால்நடைகளுக்கான கோமாரி தடுப்பூசி தட்டுப்பாடு: இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பு!

English Summary: Disappointed with the return of the check given by Chief Stalin without cash!
Published on: 19 December 2021, 11:54 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now