மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 4 November, 2021 7:41 PM IST

தீபாவளி என்றாலே தித்திக்கும் இனிப்பும், பட்டாசும்தான் நம் நினைவுக்கு வரும்.

இனிப்புக் கடைகள் (Sweet shops)

தீபாவளி இன்று சாமிக்கு சுமார்10 நாட்களுக்கு முன்பிருந்தே பலகாரங்களைத் தயார் செய்து வைப்பது கடந்த பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்தது.
ஆனால் இயந்திரமயமான உலகில், பழைய நடைமுறைகளுக்கு நேரமில்லை.

இதனைக் கருத்தில்கொண்டு, தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, ஆங்காங்கே இனிப்புக் கடைகளைத் திறந்து, லாபம் சம்பாதிக்க முயற்சி செய்வர். இவர்கள் மூலம் தரமற்றப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க தற்போதே விழித்துக்கொண்டிருக்கிறது, உணவுப் பாதுகாப்புத்துறை.

தீபாவளியை முன்னிட்டு இனிப்பகங்களில், தயாரிக்கப்படும் உணவு வகைகள் தரமானதாக உள்ளதா? என்பதை கண்டறிய மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை சார்பில், பல்வேறு ஆய்வுகள் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இனிப்பு வகைகளில் தரத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என  வலியுறுத்தப்பட்டுள்ளது. தரமற்ற முறையில் இனிப்பு, காரம் தயாரிக்கும் நிறுவனங்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வழிமுறைகள் (Instructions)

  • உணவு பொருட்களுக்கு தரத்துக்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும்.

    இனிப்பு தயாரிக்கும் நிறுவனங்கள், அனுமதிக்கப்பட்ட நிறங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

  • உணவு கையாளுதல், பரிமாறுதல் பணிகளை மேற்கொள்பவர்கள் கையுறைகள், தலைக்கவசம், மேலங்கிகள் அணிய வேண்டும்.

  • தயாரிக்கும் இடங்கள் சுத்தமாகவும், ஈக்கள் இன்றியும் இருக்க வேண்டும்.

  • தயாரிக்கப்பட்ட இனிப்பு வகைகளை செய்தித்தாள்கள் கொண்டு மூடி வைத்தாலோ, பிளாஸ்டிக் பைகளில் பொட்டலமிட்டாலோ, ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும்.

  • அடைக்கப்பட்ட எண்ணெய்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட எண்ணெய் உபயோகிக்கக் கூடாது.

  • சில்லரை முறையில் விற்பனை செய்ய தயாரிக்கப்படும் இனிப்பு, காரங்களில், காலாவதி தேதி, பயன்படுத்தும் தேதி குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

  • வீட்டில் இனிப்பு தயாரிப்பவர்கள், உணவு பாதுகாப்பு அதிகாரிகளிடம் தற்காலிக அனுமதி பெற வேண்டும். பெறாவிடில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

புகார் அளிக்க (To complain)

பொதுமக்கள் இனிப்பு, கார வகைகள் தயாரிப்பு நிறுவனங்கள் குறித்த புகார்களை, உணவுப்பாதுகாப்பு துறையின், 94440 42322 என்ற வாட்ஸ்ஆப் எண்ணுக்கு அனுப்பி வைக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க...

சில தாவரங்களை விதைத்தால் போதும்- சத்துக்கள் தானாகவே வந்துசேரும்!

தக்காளியின் மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு பயிற்சி!

 

English Summary: Don't sell substandard desserts and salty foods - Department of Food Safety warns!
Published on: 26 October 2021, 08:07 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now