நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 7 September, 2022 11:01 AM IST
Dramatically reduced price of tomatoe

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. இந்த நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டிற்கு வரும் காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளது. சென்னையின் பிரதான காய்கறி சந்தையான கோயம்பேட்டுக்குத் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து காய்கறி வரவழைக்கப்பட்டாலும் பெருமளவு காய்கறி வரத்துக் கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களைச் சார்ந்து இருக்கின்றது.

அண்டை மாநிலங்களில் மழை, வெள்ளம் போன்ற பாதிப்புகள் ஏற்படும்பொழுது, அதன் எதிரொலி காய்கறி வரத்திலும் ஏற்படுவது இயல்புதான். அந்நிலையில் தற்பொழுது தக்காளி விலையில் இந்த பாதிப்பு எதிரொலித்து இருக்கின்றது. இதனால் தக்காளியின் விலை தற்பொழுது உயர்ந்துள்ளது. இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

25 கிலோ எடையுள்ள ஒரு பெட்டி கடந்த மூன்று நாட்களுக்கு முன் ரூபாய் 450 முதல் 500 ரூபாய் விற்பனையானது. இந்த நிலையில் இன்று ஒரு பெட்டி 900 ரூபாய் அளவுக்கு விற்பனையாகிறது. கடைகளில் கிலோ 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த தக்காளி தற்பொழுது கிலோ 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. ஒரு சில இடங்களில் தக்காளி கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

பருவமழையின் காரணமாக தக்காளி வரத்து குறைவாக இருப்பதாகவும், இதனால் தக்காளியின் விலை அதிகரித்துள்ளதாகவும், காய்கறிகளுக்கு அதிக டிமாண்ட் உள்ளதாகவும் வியாபாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.

இத்தகைய விலையேற்றத்தால் பொதுமக்கள் பாதிக்காத வகையில் கூட்டுறவு நிறுவனங்களால் நடத்தப்படும் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் குறைவான விலைக்குத் தக்காளி விற்பனை செய்யும் நிலையில் கிருஷ்ணகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளிடமிருந்து நேரடியாகத் தக்காளி கொள்முதல் செய்யப்படலாம்.

அதனை சென்னையில் செயல்படும் திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கம், சிந்தாமணி நாம்கோ மற்றும் காஞ்சி மக்கள் அங்காடி முதலிய கூட்டுறவு பண்டகசாலைகளால் நடத்தப்படும் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் ஆகியவை மூலம் குறைவான விலைக்கு விற்பனை செய்ய தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத்துறையால் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, சென்னையில் கூட்டுறவு நிறுவனங்களால் நடத்தப்படும் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகளில் தக்காளி தற்போது ரூ.40 முதல் 42 வரை விற்பனை செய்யப்படும். பொது மக்கள் இதை வாங்கி பயனடையுமாறு தமிழக அரசு கேட்டுக்கொண்டிருக்கிறது.

மேலும் படிக்க

தமிழகத்தில் பருப்பு விலை கிடுகிடு உயர்வு!

தமிழகத்தில் அதிவேக ரயில் பாதைக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை!

English Summary: Dramatically reduced price of tomatoes: Tamil Nadu Government!
Published on: 07 September 2022, 10:43 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now