News

Monday, 17 April 2023 02:31 PM , by: R. Balakrishnan

Driving Licence

தமிழகத்தில் தற்போது போக்குவரத்துத் துறை சேவைகள் இணையவழியாக வழங்கப்பட்டு வரும் நிலையில், ஒரு சில ஆவணங்கள் தபால் மூலமாக விநியோகம் செய்ய தமிழக போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.

போக்குவரத்து துறை சேவைகள்

தமிழகத்தில் போக்குவரத்து துறையில் ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல், பழகுநர் உரிமம் பெறுதல், ஓட்டுநர் உரிம முகவரி மாற்றம் போன்ற 6 சேவைகள் இணைய வழியாக பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அது தவிர 42 சேவைகள் இணையவழியில் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இணையவழியாக செய்யும் நடைமுறைகள் மூலமாக அலுவலகத்தில் இடைத்தரகர்கள் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவதோடு, துறை மீதான லஞ்ச குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்பதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஓட்டுநர் உரிமம் (Driving licence)

ஓட்டுநர் உரிமம், பதிவுச் சான்று போன்றவற்றை தபால் மூலமாக விண்ணப்பதாரர்களுக்கு அனுப்ப போக்குவரத்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக தபால் துறையுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதற்காக வழக்கமான உரிமம் மற்றும் பதிவுச் சான்று கட்டணத்துடன் கூடுதலாக ரூ.50 வசூலிக்கப்படும் எனவும், சொந்த பயன்பாட்டுக்கான வாகனங்களுக்கு அதிகபட்சம் ரூ.1,150 வசூலிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பதிவுச் சான்றைப் பொறுத்தவரை சாலை பாதுகாப்பு வரி, வாழ்நாள் வரி, சேவை கட்டணம் தவிர்த்து அதிகபட்சமாக ரூ.650 வசூலிக்க வாய்ப்பு இருப்பதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க

இயற்கை விவசாயத்திற்கு மவுசு: திருப்பதி லட்டு இனி இப்படித் தான் தயாரிக்கப்படும்!

அரசுப் பணியாளர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு: மாநில அரசு அறிவிப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)