மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 23 April, 2021 5:54 PM IST
Credit : Dinamalar

கொரோனா தடுப்பூசி விநியோகத்திற்கு, 'டிரோன் (Drone)' எனப்படும், ஆளில்லா குட்டி விமானத்தை பயன்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்திற்கு, விமான போக்குவரத்து அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.

டிரோன் மூலம் தடுப்பூசி

இந்தியாவில், மே 1 முதல், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி (Corona Vaccine) போட, அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், மலைப் பிரதேசங்களில் தடுப்பூசிக்கான தேவை அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அத்தகைய சூழலில், டிரோன்களை பயன்படுத்துவது சாத்தியமா என, அரசு பரிசீலித்து வருவதாக தெரிகிறது. இதையொட்டி, விமான போக்குவரத்து அமைச்சகம், டிரோன் மூலம் தடுப்பூசி விநியோகிப்பது குறித்து ஆய்வு செய்ய, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது.

Credit : Daily Thandhi

கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில், மக்களுக்கு தடுப்பூசி போடுவது அதிகரித்து வருகிறது. மலைப்பகுதியில் தடுப்பூசிகளை எடுத்துச் செல்வதில் சிரமம் ஆக இருக்கும் என்பதால், டிரோன்களை பயன்படுத்த அரசு அனுமதி அளித்துள்ளது.

உத்தரகண்டில், டேராடூன், ஹரித்துவார் உள்ளிட்ட நான்கு நகரங்களில், அசையா சொத்துக்களின் தகவல்களை சேகரிக்க, டிரோன்களை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அதுபோல, ரயில் விபத்து பகுதிகளையும், ரயில்வே சொத்துக்களையும் அடையாளம் காண, மேற்கு மத்திய ரயில்வே, டிரோன் பயன்படுத்த ஒப்புதல் தரப்பட்டுள்ளது. தனியார் துறையில், வேதாந்தா குழுமத்திற்கு, அதன் கனிம வளங்களை ஆய்வு செய்ய, நிபந்தனைகளுடன் டிரோன் பயன்படுத்த அனுமதி தரப்பட்டுள்ளது.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

உலக பூமி தினம்! பிளாஷ்டிக்கை தவிர்த்து, நம் பூமியை மீட்டெடுப்போம்!

கொரோனா தடுப்பூசிக்கு ஏப்ரல் 24 முதல் முன்பதிவு துவக்கம்! 18 வயதை கடந்தவர்கள் பதிவு செய்யலாம்!

English Summary: Drone use to distribute corona vaccine! Government permission to inspect!
Published on: 23 April 2021, 05:54 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now