மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 1 January, 2021 10:26 AM IST
Credit : Dinakaran

நாகை மாவட்டத்தில் 3 லட்சம் ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் சாகுபடி (Cultivation) நடந்தது. இதில் புரெவி புயல் (Burevi Storm) காரணமாக 2 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான சம்பா மற்றும் தாளடி பயிர்கள் சேதமடைந்தது. இந்த பாதிப்பில் இருந்து மீண்டு வரமுடியாத நிலையில் கடைமடை விவசாயிகள் இருந்து வருகின்றனர்.

நெற்பயிர்கள் சேதம்:

கடந்த சில தினங்களாக நாகை மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நாகை, செல்லூர், பாலையூர், ஐவனல்லூர், கீழ்வேளூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 10 ஆயிரம் ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் (Paddy crops) சாய்ந்து நாசமாகி உள்ளது. இதை கண்டு விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற பழமொழிக்கு ஏற்ப, தைபொங்கல் அன்று புது அரிசியில் பொங்கலிட்டு கொண்டாடலாம் என்று எண்ணியிருந்த விவசாயிகளுக்கு பயிர்கள் சாய்ந்தது ஏமாற்றத்தையும், பெரும் இழப்பையும் (Heavy loss) ஏற்படுத்தியுள்ளது.

விவசாயிகள் கோரிக்கை:

மத்திய, மாநில அரசுகள் தேர்தல் அறிவிப்பு வருவதற்கு முன்னதாக விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு (Compensation) வழங்க வேண்டும். ஏற்கனவே பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் விவசாயிகளுக்கு மீண்டும் சோதனையாக பருவம் தவறி மழை பெய்து வருகிறது. இனியும் காலம் தாழ்த்தாமல் நிவாரண தொகையை விரைவில் அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ஏக்கருக்கு உழவு, நடவு, உரம் உள்ளிட்ட இருபொருட்களுக்காக (inputs) ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்துள்ளோம். ஒரு மாதத்தில் அறுவடைக்கு (Harvest) தயாராக உள்ள நிலையில் பருவம் தவறி மழை பெய்து வருகிறது. இதனால் பயிர்கள் நீரில் மூழ்கி வைக்கோலுக்கு கூட பயன்படாது என்று கண்ணீருடன் தெரிவித்தனர்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

விவசாயிகள் வருமானத்தை அதிகரிக்க 100-வது கிசான் விவசாயிகள் ரயிலை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

பூச்சி / நோய்த் தாக்குதலால் சின்ன வெங்காயத்தின் விலையில் பெரும் தாக்கங்கள்!

English Summary: Due to the heavy rains that missed the season, 10,000 acres of paddy ready for harvest fell! Farmers suffer
Published on: 01 January 2021, 10:26 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now