மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 11 December, 2021 1:43 PM IST
Electricity tariff hike in Tamil Nadu: Is Electricity Board is in debt!

மின் கட்டணத்தை உயர்த்துமாறு மத்திய அரசு தமிழக மின் வாரியத்திற்கு அறிவுறுத்திருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்சமயம் தமிழக மின்வாரியம், கடனில் உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே தமிழக மின் வாரியம் கடனிலிருந்து மீளுவதற்காக, மின் கட்டணத்தை உயர்த்துமாறு மத்திய அரசு தமிழக மின் வாரியத்தை அறிவுறுத்தியுள்ளது.  இந்த அறிவுறுத்தல் குறித்து மாநிலம் முழுவதும் கடும் எதிர்ப்பு காணப்படுகிறது. இதை தொடர்ந்து, அகில இந்திய மின்சார நுகர்வோர் சங்கம் (தமிழ்நாடு) கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறது.

இதுகுறித்து வெளியிட்டப்பட்டுள்ள செய்திக் குறிப்பில்: “ஏற்கனவே வேலையின்மை, பெட்ரோல், டீசல், வெங்காயம், தக்காளி போன்ற அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வால், பல்வேறு பிரச்சனைகளில்  சிக்கிக் கொண்டிருக்கும் நாட்டு மக்களுக்கு மேலும் ஒரு பெரிய அடியாக இந்த மின் கட்டண உயர்வு இருக்கும். போதாததற்கு மக்கள் மேலும் சிரமத்திற்கு ஆளாவர்.

மின் வாரியத்தின் கடனை மக்கள் மீது சுமத்துவது எப்படி நியாயமாகும்? மின் வாரியம் கடன் சுமையில் இருப்பது உண்மை என்றால், அதற்கு மக்கள் பொறுப்பல்ல. மின்சாரமும், நிலக்கரியும் தனியாரிடம் அதிக விலை கொடுத்து கொள்முதல் செய்வது மற்றும் பராமரிப்பதில் நிர்வாகச் சீர்கேடு போன்ற பல்வேறு முறையில் நிலவும் கேடுகெட்ட ஊழல் போன்றவையே காரணமாகும். சங்கப் பிரதிநிதிகள், தனியார் மைய நடவடிக்கைகளைத் திரும்பப் பெறுவது குறித்தும், வாரியத்தில் நிலவும் ஊழல்களைக் களைந்து எடுப்பது போன்ற பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளில் கவனம் செலுத்தினால் மின் வாரியத்தை கடனிலிருந்து மீட்கலாம்.

அதை விடுத்து, மக்கள் மீது சுமந்தப்படும் மின் கட்டணம் உயர்வு ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என இந்திய மின்சார நுகர்வோர் சங்கம் (தமிழ்நாடு) தெரிவித்துள்ளது. எனவே, மின் கட்டணத்தை உயர்த்தும்  அறிவுறுத்தலை, மத்திய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும். அதாவது, மின் மசோதா 2021யை திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசையும், மத்திய அரசின் இந்த அறிவுறுத்தலை முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும் என மாநில அரசையும் நாங்கள் வலியுறுத்துகிறோம். பொதுமக்களும் எங்கள் சங்கத்துடன் உறுதுணையாக நிற்க வேண்டும் என்று வேண்டுகிறோம்” என்று இந்திய நுகர்வோர் சங்கம் (தமிழ்நாடு) தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க:

தமிழகத்தில் மின் வெட்டு! எப்போது வரும் கரண்ட்?

வீடுகளில் சூரியசக்தி மின் நிலையம் அமைத்தால் 40% மானியம்!

English Summary: Electricity tariff hike in Tamil Nadu: Is Electricity Board is in debt!
Published on: 11 December 2021, 01:43 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now