நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 20 December, 2022 7:36 AM IST
Enriched Rice in Ration shops

தமிழக ரேஷன் கடைகளில் மக்களுக்கு ஊட்டச்சத்தை அளிக்கும் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் மாதம் முதல் இந்த அரிசி வழங்கப்படும் என்று உணவு வழங்கல் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ரேஷன் கடை (Ration Shop)

தமிழக ரேஷன் கடைகளில் மக்களுக்கு குறைந்த விலையில் அரிசி,பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது ரேஷன் கடைகளில் பட்டை தீட்டிய அரிசி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு அரிசியை தீட்டும் போது அதிலுள்ள சத்துக்கள் முழுவதும் வீணாகிறது. இதனால் மக்களுக்கு ஊட்டச்சத்து கிடைப்பதில்லை. தற்போது ஊட்டச்சத்து குறைபாட்டினால் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். இதனால் பல வித நோய்களுக்கும் ஆளாகின்றனர். இதனை தடுக்கும் வகையில் உடம்புக்கு தேவையான ஊட்டச்சத்தை அளிக்கும் செறிவூட்டப்பட்ட அரிசி ரேஷன் கடைகளில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செறிவூட்டப்பட்ட அரிசி (Enriched Rice)

வரும் 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படவுள்ளதாக இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் உணவு வழங்கல் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். அத்துடன் கடந்த ஆண்டை விட 3 முதல் 4 மடங்கு கூடுதலாக அரிசி கடத்தல் தடுக்கப்பட்டுள்ளது என்றும் தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் பொங்கல் பானைகள்: உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி!

திருச்சியில் தொடங்கிய விவசாயக் கண்காட்சி: மிஸ் பண்ணாதிங்க!

English Summary: Enriched rice in ration shops: Minister's important announcement!
Published on: 20 December 2022, 07:36 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now