1. செய்திகள்

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் பொங்கல் பானைகள்: உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி!

R. Balakrishnan
R. Balakrishnan
Pongal Pots

பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில் நெல்லையிலிருந்து 2000 மண் பானைகள் கடல் கடந்து மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. ஆண்டுதோறும் ஆர்டர்கள் அதிகரிப்பதால் மண்பானை உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பொங்கல் பானைகள் (Pongal Pots)

நெல்லை தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதியில் உள்ள நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மண்பாண்டம் தயாரிக்கும் பணிகள் பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வருகிறது. தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதிகளில் உள்ள குளங்களிலும், தாமிரபரணி ஆற்றின் கரையோரத்திலும் கிடைக்கும் தரமான களிமண்ணால் செய்யப்படும் இந்த மண்பாண்ட பொருட்களில் செய்யப்படும் உணவு பதார்த்தங்களுக்கு தனிச் சுவை இருக்கும்.

இந்தப் மண்பாண்ட பொருட்களுக்கு தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகம் என்று மட்டுமல்லாமல் வளைகுடா நாடுகள், மலேசியா, சிங்கப்பூர் ஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் அதிக கிராக்கி உள்ளது. அகல் விளக்குகள், தேநீர் கோப்பைகள், தண்ணீர் பாட்டில்கள், அலங்கார பூச்சட்டிகள், சாம்பிராணி கிண்ணம், பிரியாணி சட்டிகள், சூப் கிண்ணம், பொங்கல் வைப்பதற்கான மண் பானைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் இந்தப் பகுதியில் செய்யப்பட்டு வருகிறது.

வெளிநாடுகளில் உள்ள பல்வேறு ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் பிரியாணி மற்றும் உணவு பதார்த்தங்கள் இது போன்ற மண்பாண்டங்களில் பரிமாறப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. இதையொட்டி ஆண்டுக்கு 30 கோடி வரை இந்த மண்பாண்டங்கள் தமிழகத்திலிருந்து ஏற்றுமதிஆகின்றன. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காலத்தில் வெளிநாடுகளுக்கு எந்தவித பொருட்களும் ஏற்றுமதி செய்யப்படாமல் இருந்து வந்த நிலையில் தற்போது தமிழர்கள் அதிகம் வாழும் மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் பொங்கல் பானைகள் ஏற்றுமதிக்கான ஆர்டர்கள் கிடைத்துள்ளன.

மண்பாண்ட உற்பத்தியை அரசாங்கம் ஊக்குவித்தால் திருப்பூருக்கு எப்படி பின்னலாடை பெயர் பெற்றதோ அதுபோல் மண்பாண்டத்திற்கு திருநெல்வேலி மாவட்டம் சிறப்பு வாய்ந்ததாக அமைவதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் இருப்பதாக இங்குள்ள மண்பாண்ட உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் பட்சத்தில் தென் மாவட்டங்களில் இருந்து இளைஞர்கள் வேலை தேடி சென்னைக்கு செல்வதற்கு தேவை இருக்காது என்றும் கூறுகின்றனர்.

English Summary: Pongal pots exported abroad: Manufacturers rejoice! Published on: 19 December 2022, 07:11 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.