மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 6 June, 2021 6:23 PM IST

கோபிசெட்டிபாளையத்தை அடுத்த மேவானி கிராமத்தில் நெல் இயந்திர நடவுப் பணியினை வேளாண் இணை இயக்குநர் எஸ்.சின்னசாமி தொடங்கி வைத்தார். அப்போது, நடப்பு குறுவை பருவத்தில், ஈரோடு மாவட்டத்தில் 4600 ஹெக்டரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.

 

குறுவை நெல் சாகுபடி

ஈரோடு மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் செம்மை நெல் சாகுபடி குறித்த செயல் விளக்கங்களும், விழிப்புணர்வுப் பிரச்சாரங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசனப் பகுதியில் குறுவை நெல் சாகுபடி நடவுப் பணிகள் தொடங்கியுள்ளது. கோபியை அடுத்த மேவானி கிராமத்தில் நெல் இயந்திர நடவுப் பணியினை வேளாண் இணை இயக்குநர் எஸ்.சின்னசாமி தொடங்கி வைத்தார்.

செம்மை நெல் சாகுபடி முறை

அப்போது அவர் பேசுகையில், செம்மை நெல் சாகுபடி முறையில் (ஒற்றை நாற்று நடவு முறை) நெல் நடவு செய்வதன் மூலம் குறைந்த அளவு விதை நெல் போதுமானது. நடவு ஆட்கள் தேவை குறையும். மேலும், இளவயது நாற்றுகளை சரியான இடைவெளியில் நடுவதால், பயிர்களுக்கு இடையே காற்றோட்டம் மற்றும் பராமரிப்பு அதிகரித்து, அதிக தூர் கட்டுதல் மற்றும் அதிக மணிகள் பிடித்து மகசூல் அதிகரிக்கும்.

பூச்சி & நோய் கட்டுப்பாடு முறை

மேலும் மொத்த நெல் சாகுபடி பரப்பில் 80 சதவீதம் பரப்பளவில் செம்மை நெல் சாகுபடி முறையை அறிமுகப்படுத்த விவசாயிகளிடம் தீவிர பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. இது தவிர வரப்புகளில் உளுந்து மற்றும் தட்டைப்பயறு போன்ற பயறுவகைகளை, பயிரிடுவதன் மூலம் நன்மை செய்யும் பூச்சிகளை கவர்ந்து இயற்கை முறையில் பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாட்டு முறைக்கு உதவுகிறது.

மானிய விலை விதை நெல்

குறுவை பருவத்திற்கு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் பரிந்துரைத்துள்ள ஏ.எஸ்.டி. - 16, டி.பி.எஸ் - 5, ஏ.டி.டி.-45 போன்ற குறுகிய கால வயதுடைய ரகங்கள் தற்போது நடவு செய்யப்பட்டு வருகிறது. இதுவரை மொத்தம் 55 மெட்ரிக் டன் அளவு விதை நெல் மானிய விலையில் உழவர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. நடப்பு குறுவை பருவத்தில், ஈரோடு மாவட்டத்தில், 4600 ஹெக்டரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்படவுள்ளது என்று கூறினார்.

மேலும் படிக்க...

கார்ப் பருவ சாகுபடிக்கு கடனுதவி வேண்டி, நெல்லை மாவட்ட விவசாயிகள் வேண்டுகோள்!

பருத்தியில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த முடியாமல் விவசாயிகள் தவிப்பு!

ராணிப்பேட்டையில் சிறு குறு விவசாயப் பயன்பாட்டுக்கு வாடகையின்றி டிராக்டர்!

English Summary: Erode district plan to produce 4600 hectares of paddy cultivation in kharif season
Published on: 06 June 2021, 06:22 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now