மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 16 February, 2023 1:44 PM IST
Electricity - Aadhar Linking

தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி தமிழ்நாட்டில் உள்ள வீடு, கைத்தறி, விசைத்தறி, குடிசை மற்றும் விவசாய மின் இணைப்புதாரர்கள் தங்களது மின் இணைப்பு எண்ணினை ஆதாருடன் இணைப்பது சம்பந்தமாக நேற்று (பிப்ரவரி 15) பேசுகையில் கீழ்க்கண்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.

மின்சாரம் - ஆதார் இணைப்பு

தமிழ்நாட்டில் உள்ள வீடு, கைத்தறி, விசைத்தறி, குடிசை மற்றும் விவசாய மின் இணைப்புதாரர்கள் மின் இணைப்பு எண்ணை அவர்களது ஆதாருடன் இணைக்கும் பணியானது மத்திய அரசின் ஒப்புதலுடன் தமிழக அரசின் மின் ஆளுமை முகமையின் அனுமதி பெற்று தமிழ்நாட்டில் உள்ள வீடு, கைத்தறி, விசைத்தறி, குடிசை மற்றும் விவசாய மின் இணைப்புதாரர்களின் மின் இணைப்பு எண்ணை அவர்களது ஆதாருடன் இணைக்கும் பணியானது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தால் 15.11.2022 முதல் ஆன்லைன் மூலமாகவும், 28.11.2022 முதல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து 2,811 பிரிவு அலுவலகங்களிலும் சிறப்பு கவுண்டர்கள் மூலமாகவும் ஆதார் எண்ணை இணைப்பதற்கான பணிகள் துவக்கி வைக்கப்பட்டன.

இந்தப் பணிகளை முடிப்பதற்கு முதற்கட்டமாக 31.12.2022 வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது. பொதுமக்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்தக் காலக்கெடுவானது 31.01.2023 வரை நீட்டிக்கப்பட்டது. 2023 ஜனவரி மாதத்தில் தைப்பொங்கல் உள்ளிட்ட விடுமுறை நாட்கள் அதிகம் இருந்ததால், 15.02.2023 வரை மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைப்பதற்கு இறுதியாக காலநீட்டிப்பு செய்யப்பட்டது.

இதுவரை தமிழ்நாட்டில் ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைத்த மின் இணைப்புகளின் விவரம்:

  • வீட்டு மின் இணைப்புகள் : 227.58 லட்சம் (97.72%)
  • கைத்தறி மின் இணைப்புகள் : 0.73 லட்சம் (98.66%)
  • விசைத்தறி மின் இணைப்புகள்: 1.60 லட்சம் (98.42%)
  • குடிசை மின் இணைப்புகள் : 8.42 லட்சம் (91.05%)
  • விவசாய மின் இணைப்புகள் : 22.25 லட்சம் (95.57%)
  • மொத்தம் : 260.58 லட்சம்

மீதமுள்ள பொதுமக்களும் தங்களது ஆதார் எண்களை மின் இணைப்பு எண்ணுடன் இணைப்பதற்காக வருகின்ற 28.02.2023 வரை காலக்கெடு இறுதியாக நீட்டிக்கப்படுகிறது.

பொதுமக்கள் அனைவரும் இந்த கால நீட்டிப்பு அவகாசத்தை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு மின்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் சம்பள உயர்வு: எவ்வளவு தெரியுமா?

குரூப் 4 தேர்வு முடிவுகள்: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த TNPSC!

English Summary: Extension of time to link Aadhaar with electricity connection number: Minister notice!
Published on: 16 February 2023, 01:44 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now