மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 3 March, 2021 2:15 PM IST
Credit : Business Today

பான் மற்றும் ஆதார் அட்டையை இணைக்கத் தவறியவர்களுக்கு 10,000 ரூபாய் அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் வருமான வரிச் சட்டத்தின் கீழ் எடுக்கப்படும் என வருமான வரித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

காலக்கெடு (Deadline)

பான் மற்றும் ஆதார் எண்ணை இணைப்பதற்கு மத்திய அரசு தொடர்ந்து கால அவகாசம் அளித்துவருகிறது. இந்த அவகாசம் மார்ச் 31ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது.

நீட்டிப்பு இல்லை (No extension)

பான் மற்றும் ஆதார் இணைப்பிற்கான காலக்கெடு நீட்டிக்கப்படாது.

செல்லாத பான் அட்டை (Invalid pan card)

எனவே இவ்விரண்டு அட்டைகளையும் இணைக்காத பட்சத்தில், உங்களின் பான் அட்டை செல்லாததாக ஆகக் கூடும். அவ்வாறு இணைக்கப்படாத பான் அட்டை செல்லாததாகிவிடும்.

செல்லாத பான் அட்டை வைத்திருப்பவர்கள், வருமான வரிச் சட்டத்தின் கீழ் நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும் என்று வருமான வரித் துறை எச்சரித்துள்ளது.

அத்தகைய பான் அட்டை வைத்திருப்பவர்கள், பான் அல்லாத அட்டை வைத்திருப்பவர்களாக கருதப்படுவதோடு மட்டுமல்லாமல், வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 272 பி இன் கீழ் ரூ .10,000 அபராதமும் விதிக்கப்படும்.

அபராதம் (Penalty)

ஒருவரின் பான் மற்றும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாதபோது நீங்கள் பின்வரும் பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும்.

நீங்கள் ஒரு வங்கியில் ஒரு கணக்கைத் திறக்க முயற்சித்தால் அல்லது ரூ .50,000 க்கு மேல் பணத்தை டெபாசிட் செய்ய, கணக்கில் இருந்து பணத்தை எடுக்க முயற்சித்தால், உங்கள் பான் அட்டையைக் கொடுக்க வேண்டும். நீங்கள் தவறான அல்லது செல்லாத பான் அட்டையைக் கொடுத்தால் உங்களுக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்படலாம்.

வங்கி கணக்கைத் திறப்பது, பரஸ்பர நிதி அல்லது பங்குகளை வாங்குவது மற்றும் ரூ .50,000 க்கும் அதிகமான பண பரிவர்த்தனைகள் செய்வது போன்ற பல நடவடிக்கைகளுக்கு பான் அட்டை வைத்திருப்பது கட்டாயமாகும்.

ஆன்லைனில் இணைப்பது எப்படி? (How to connect online?)


ஒரு எஸ்எம்எஸ் (SMS) மூலம் ஆதார்  மற்றும் பான் அட்டையை இணைக்க, 567678 அல்லது 56161 என்ற எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும்.

UIDAIPAN (12 டிஜிட்டல் ஆதார் எண்) இடம் (10 இலக்க பான் எண்) என எஸ் எம் எஸ் அனுப்ப வேண்டும்

ஆதார் அட்டை எண் ABCDXXXXXXXXX மற்றும் பான் அட்டை எண் ABCXXXXXXX எனில், எஸ்எம்எஸ் வடிவம் "UIDAIPANABCDXXXXXXXXX ABCXXXXXX" என இருக்கும்.

மேலும் படிக்க....

Free Cooking Gas: ஒரு கோடி ஏழைகளுக்கு இலவச சமையல் சிலிண்டர்- உடனே விண்ணப்பியுங்கள் !

நெல் கொள்முதல் நிறுத்தி வைப்பு- விவசாயிகள் வேதனை!

பெண்களின் ஆரோக்கியம் காக்கும் கம்பு! மேலும் பல பயன்கள் அறிவோம்

English Summary: Failure to connect PAN and Aadhaar card will result in a fine of Rs 10,000!
Published on: 03 March 2021, 02:15 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now