News

Thursday, 22 September 2022 05:56 PM , by: T. Vigneshwaran

Farmer commits suicide

கன்னியாகுமரி மாவட்டம், வேர்கிளம்பி பகுதியில் விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அதற்கான காரணத்தைத் தெரிந்து விவசாயிகள் உருகி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் வேர்கிளம்பி அருகில் உள்ள குமாரபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர். விவசாயியான இவர் இன்று காலையில் தன் தோட்டத்திற்கு வைத்திருந்த மருந்தையும், விஷத்தையும் கலந்து குடித்து பரிதாபமாக உயிர் இழந்தார். ராஜசேகர் விவசாயத்தில் தீவிர ஈடுபாடு கொண்டவர். அண்மைக்காலமாக அவருக்கு விவசாயத்தில் போதிய மகசூலும், லாபமும் இல்லை. இருந்தாலும், விவசாயத்தை விடாமல் செய்து வந்தார்.

இந்நிலையில் இவரது விவசாயத்தை அபிவிருத்தி செய்வதற்காக ராஜசேகருக்கு பணம் தேவைப்பட்டது. அப்போது, வங்கியில் விவசாயக் கடன் பெற்று அந்தப் பணத்தை விவசாயத்தில் போடலாம் என முடிவு செய்தார். இந்த முடிவை தன் வீட்டிலும் சொன்னார். ஆனால், ஏற்கெனவே அவருக்கு விவசாயம் லாபகரமாக இல்லை எனவும், அதனால் வங்கியில் விவசாயக் கடன் பெறுவதற்கான நில ஆவணங்களைத் தரமுடியாது எனவும் அவரது மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர் மறுத்துள்ளனர்.

இதனால் தன்னால் விவசாயம் செய்ய இயலாது என மனம் உடைந்து ராஜசேகர் தற்கொலை செய்து கொண்டார். குமரி விவசாயியின் இந்த சோக முடிவு குறித்து கொற்றிக்கோடு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க:

நெல்லையில் ரூ. 10.62 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டங்கள்

மாரடைப்பு வருவதற்கான '5' முக்கிய அறிகுறிகள்

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)