அறுவடை செய்த நெல்லினை விற்பனை செய்ய உள்ள வழிகள் என்ன? நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் மக்காச்சோள சாகுபடி சிறப்புத் திட்டம்- விவசாயிகளுக்கு ரூ.6000 மதிப்பிலான தொகுப்பு! கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 6 October, 2023 5:10 PM IST
Farmers are invited to insure crops under the Prime Minister's Crop Insurance Scheme!

வேளாண்மை பயிர்களில் பூச்சிநோய் மற்றும் இயற்கை இடர்பாடுகளால் எதிர்பாராத இழப்பு ஏற்படும் பட்சத்தில் விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கவும், நிலையான வருமானம் கிடைக்கச் செய்து, அவர்களை விவசாயத்தில் நிலைப்பெறச் செய்யவும், திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் மத்திய அரசின் புதிய வழிகாட்டுதலின்படி செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, நடப்பு 2023-24ம் ஆண்டில் ராபி மற்றும் சிறப்பு பருவங்களுக்கு அரியலூர் மாவட்டத்தில் "யுனிவர்சல் சோம்ப்போ ஜெனரல் இன்ஸ்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட்'' என்ற முகமையின் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் சிறப்பு பருவத்தில், நெல் II பயிருக்கு ஆண்டிமடம், குவாகம், குண்டவெளி, உடையார்பாளையம், தா.பழூர், சுத்தமல்லி, அரியலுார், ஏலாக்குறிச்சி, கீழப்பழூர், மாத்தூர், செந்துறை, நாகமங்கலம், பொன்பரப்பி, ஜெயங்கொண்டம், திருமானூர் ஆகிய 15 பிர்காக்களிலும், பருத்தி II பயிருக்கு அரியலுார், ஏலாக்குறிச்சி, கீழப்பழூர், மாத்தூர், செந்துறை, நாகமங்கலம் மற்றும் சுத்தமல்லி ஆகிய 7 பிர்காக்களிலும், மக்காச்சோளம் II பயிருக்கு அரியலூர், நாகமங்கலம், ஏலாக்குறிச்சி, கீழப்பழுவூர், திருமானூர், R.S மாத்தூர் மற்றும் செந்துறை ஆகிய 7 பிர்காக்களிலும் பயிர் காப்பீடு செய்ய அரசால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டத்தின்கீழ் ராபி பருவத்தில் உளுந்து பயிருக்கு ஆண்டிமடம், குவாகம், உடையார்பாளையம், பொன்பரப்பி, R.S மாத்தூர், செந்துறை, சுத்தமல்லி, தா.பழூர் மற்றும் திருமானூர் ஆகிய 9 பிர்காக்களிலும், நிலக்கடலை பயிருக்கு ஆண்டிமடம், குவாகம், அரியலுார், நாகமங்கலம், ஜெயங்கொண்டம், குண்டவெளி, உடையார்பாளையம், பொன்பரப்பி, R.S மாத்தூர், செந்துறை, சுத்தமல்லி மற்றும் தா.பழூர் ஆகிய 12 பிர்காக்களிலும் பயிர் காப்பீடு செய்துகொள்ளவும் அரசால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நடப்பு 2023-24ம் ஆண்டு சிறப்பு பருவத்தில் நெல் II மற்றும் மக்காச்சோளம் II பயிருக்கு நவம்பர் 15ம் தேதி வரையிலும் மற்றும் பருத்தி II பயிருக்கு அக்டோபர் 31ம் தேதி வரையிலும் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம். விவசாயிகள் 1 ஏக்கர் நெல் II பயிருக்கு ரூ.567-ம், 1 ஏக்கர் மக்காச்சோளம் II பயிருக்கு ரூ.341.25-ம் மற்றும் 1 ஏக்கர் பருத்தி II பயிருக்கு ரூ.578.03-ம் பிரிமீயத் தொகையாக செலுத்தி தங்களது பயிருக்கு காப்பீடு செய்து கொள்ளலாம். மேலும் ராபி பருவத்தில் உளுந்து பயிருக்கு நவம்பர் 30ம் தேதி வரையிலும், நிலக்கடலை பயிருக்கு 2024 ம் ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி வரையிலும் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம். விவசாயிகள் 1 ஏக்கர் உளுந்து பயிருக்கு ரூ.210-ம், 1 ஏக்கர் நிலக்கடலை பயிருக்கு ரூ.349.5-ம் பிரிமீயத் தொகையாக செலுத்தி தங்களது பயிருக்கு காப்பீடு செய்து கொள்ளலாம்.

விவசாயிகள் பொது சேவை மையத்தில் பதிவு செய்யும் போது கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல், வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து பிரிமியத் தொகையை செலுத்தியபின் அதற்கான ரசீதை பெறலாம். தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க சேவை மையங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் காப்பீடு செய்யலாம்.

இது தொடர்பான விபரங்களுக்கு, வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா, அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க:

இல்லம் தேடி வரும் ரூ.1 லட்சம் வரை வழங்கும் விவசாய கடன் அட்டை: என்ன செய்ய வேண்டும்?

PMFBY: விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய சேலம் மாவட்ட ஆட்சியர் அழைப்பு!

English Summary: Farmers are invited to insure crops under the Prime Minister's Crop Insurance Scheme!
Published on: 06 October 2023, 05:10 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now