மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 1 April, 2023 9:57 AM IST
Farmers can get the necessary proof seeds says dharmapuri Collector

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி இஆப., தலைமையில் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு தலைமை தாங்கிய மாவட்ட ஆட்சித்தலைவர் விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று அவர்களிடத்தில் கலந்துரையாடினார். அவற்றின் விவரங்கள் பின்வருமாறு-

தமிழ்நாடு முதலமைச்சர் விவசாயிகளின் பொருளாதார மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து அதனைச் சிறப்பாகச் செயல்படுத்தி வருகின்றார்கள். வேளாண் உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுத்து அரசு அறிவித்து செயல்படுத்தி வருகின்ற அனைத்துத் திட்டங்களையும் வேளாண் பெருமக்களுக்கு முழுமையாக கொண்டு சேர்த்திட மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

தருமபுரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு (2022) 1120.8 மி.மீ சராசரி மழையளவு கிடைத்தது. இந்த ஆண்டு மார்ச்-2023 திங்கள் வரை 48.92 மி.மீ மழையளவு பெறப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் வேளாண்மை உழவர் நலத் துறையில் 2022-2023 ஆம் ஆண்டிற்கு 1,67,000 ஹெக்டேர் பரப்பளவில் நெல், சிறுதானியங்கள், பயிறு வகைகள் உள்ளிட்ட உணவு தானிய பயிர்கள் மற்றும் எண்ணெய் வித்துக்கள், பருத்தி, கரும்பு சாகுபடி பரப்பாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை இறவை சாகுபடி 40,332 ஹெக்டேர் பரப்பளவும், மானாவாரி சாகுபடி 1,22,896 ஹெக்டேர் பரப்பளவும் என மார்ச் -2023 வரை மொத்தம் 1,63,228 ஹெக்டேர் பரப்பளவில் நெல், சிறுதானியங்கள், பயிறு வகைகள் உள்ளிட்ட உணவு தானிய பயிர்கள் மற்றும் எண்ணெய் வித்துக்கள், பருத்தி, கரும்பு உள்ளிட்ட பயிர்கள் இறவை மற்றும் மானாவாரி பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

வேளாண் பயிர்களின் உற்பத்தியை பெருக்கும் பொருட்டு இந்த 2022-2023 ஆம் ஆண்டிற்கு 752.6 மெட்ரிக் டன் நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் பருத்தி சான்று விதைகள் உள்ளிட்டவை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நடப்பு மாதம் வரை 559.76 மெட்ரிக் டன் நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள் எண்ணெய் வித்துக்கள், மற்றும் பருத்தி சான்று விதைகள் உள்ளிட்டவை விநியோகம் செய்யப்பட்டுள்ளது. 90.83 மெட்ரிக் டன் நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள் எண்ணெய் வித்துக்கள், மற்றும் பருத்தி சான்று விதைகள் அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தேவையான சான்று விதைகளை பெற்று பயன்படுத்திக் கொள்ளலாம்.

தருமபுரி மாவட்டத்திற்கு வருடாந்திர உரத்தேவை 62484 மெட்ரிக் டன் என கணக்கிடப்பட்டுள்ளது. 11,409 மெட்ரிக் டன் யூரியா, டிஏபி, பொட்டாஷ், காம்ப்ளக்ஸ், எஸ்.எஸ்.பி உள்ளிட்ட உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. மேலும் இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் பொருட்டு அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, ரைசோபியம் போன்ற உயிர் உரங்கள் 2022-23 ஆம் ஆண்டிற்கு 30,000 எண்ணிக்கைகள் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், நடப்பு மாதம் முடிய 23,833 எண்ணிக்கையிலான உயிர் உரங்கள் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு உள்ளன. 7,167 எண்ணிக்கையிலான உயிர் உரங்கள் இருப்பில் உள்ளன. உயிர் உரங்கள் தேவையான அளவு இருப்பு உள்ளன. விவசாயிகள் தங்களுக்கு தேவையானவற்றை பெற்று பயன்படுத்திக்கொள்ளலாம்.

தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையில் 2022-2023 ஆம் ஆண்டிற்கு 93,873 ஹெக்டர் பழங்கள், காய்கறிகள், வாசனை பயிர்கள், மலைப்பயிர்கள், மருத்துவ மற்றும் நறுமண பயிர்கள், பூக்கள் உள்ளிட்ட பயிர் சாகுபடி பரப்பாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை 81301.7 ஹெக்டர் பரப்பளவில் பழங்கள், காய்கறிகள், வாசனை பயிர்கள், மலைப்பயிர்கள், மருத்துவ மற்றும் நறுமண பயிர்கள், பூக்கள் உள்ளிட்டவை பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

வண்டல்மண் எடுக்க அனுமதி:

தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி துறை மற்றும் நீர்வள துறையின் கட்டுபாட்டில் உள்ள 42 ஏரிகளில் விவசாய பயன்பாட்டிற்கு இலவசமாக வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட உள்ளது. விவசாய நிலத்தை மேம்படுத்த வண்டல் மண் தேவைப்படும் விவசாயிகள் உரிய விண்ணப்பத்தினை அளித்து, தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு அதிகபட்சமாக நஞ்சை நிலமாக இருப்பின் ஏக்கர் ஒன்றிக்கு 75 கன மீட்டரும், புஞ்சை நிலமாக இருப்பின் ஏக்கர் ஒன்றிக்கு 90 கன மீட்டரும் வண்டல் மண் இலவசமாக எடுக்கலாம்.

வேளாண்மைத் துறை சார்ந்த அனைத்து திட்டங்களையும் விவசாயிகளுக்கு சரிவர எடுத்துச் சென்று அவர்களின் உற்பத்தியையும், வருமானத்தையும் அதிகரிக்கும் வகையில் வேளாண்மைத் துறையின் அனைத்து நிலை அலுவலர்களும் விவசாயிகளுக்கு வேளாண் சார்ந்த அனைத்து நலத்திட்ட உதவிகளும் கிடைக்கப்பெறுவதை அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர்.கி.சாந்தி இஆப., தெரிவித்தார்.

மேலும் காண்க:

அரசு பேருந்து ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஓய்வு வயது குறைக்கப்படுகிறதா? அமைச்சர் பதில்

STAR அந்தஸ்து பெற்ற முதல் விவசாய கல்லூரிக்கு பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கல் !

English Summary: Farmers can get the necessary proof seeds says dharmapuri Collector
Published on: 01 April 2023, 09:57 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now