மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 26 June, 2021 7:49 AM IST
Credit : Hindustan times

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் இன்று டிராக்டர் பேரணி நடத்துகின்றனர். விவசாயிகள் தங்களின் போராட்டத்தை முடித்துக்கொள்ள வேண்டும் என வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் போராட்டம்

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை கண்டித்து தலைநகர் டெல்லியில் , உத்தர பிரதேசம், பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் கடந்த நவம்பர் 27ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இன்று டிராக்டர் பேரணி

விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய பலகட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில் தங்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், விவசாயிகள் போராட்டத்தை துவங்கி 7-வது மாதம் தொடங்க உள்ள நிலையில் விவசாயிகள் சார்பில் இன்று டெல்லியில் டிராக்டர் பேரணி நடைபெற உள்ளதாக விவசாய சங்க கூட்டமைப்பின் தலைவர் ராகேஷ் திகைத் தெரிவித்துள்ளார். இதற்கான ஒத்திகைகள் தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது, மேலும் உத்தரப்பிரதேச விவசாயிகள் உள்பட ஏராளமான விவசாயிகள் டெல்லி காசியாபாத் பகுதியில் குவிந்து வருகின்றனர்

போராட்டத்தை முடித்துக்கொள்ள வேண்டும்

இதற்கிடையில் நேற்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த வேளாண் துறை மந்திரி நரேந்திர சிங் தோமர், விவசாயிகள் போராட்டத்தை முடித்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவே விவசாய சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. நாட்டில் பெரும்பான்மை பிரிவினர் இந்த சட்டங்களுக்கு ஆதரவாக உள்ளனர். எனினும், இந்த சட்டங்களில் ஏதேனும் ஷரத்துக்கள் ஆட்சேபத்துக்குரிய வகையில் இருந்தால் மத்திய அரசு அதற்கு தீர்வு காண தயாராக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க...

ஜூலை 5-ம் தேதி வரை தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு! என்னென்ன தளர்வுகள்!

மழையில் நனைந்து வீணாகும் நெல் மூட்டைகள்- அரசு நடவடிக்கை எடுக்குமா?

English Summary: Farmers hold Tractor rally again today in Delhi against agricultural laws
Published on: 26 June 2021, 07:49 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now