நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 14 July, 2023 12:29 PM IST
Farmers protest in Coimbatore! Porridge tank opened protest!!

கோயம்புத்தூர் சுல்தான்பேட்டை பகுதி அருகில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் கஞ்சி தொட்டி திறந்து போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கின்றனர். இது குறித்த கூடுதல் தகவல்களிய இப்போது பார்க்கலாம்.

விவசாயிகளின் இந்த தொடர் போராட்டம் கிழ்வரும் கோரிக்கைகளை முன்னிருத்தி நடத்தப்பட்டு வருகிறது. அவை:

  • தமிழக அரசு ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு மாற்றாக மானிய விலையில் தேங்காய் எண்ணெயினை விற்பனை செய்திட வேண்டும்.
  • 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தினை விவசாயத்திற்கு அமல்படுத்தி விவசாயத்தினை மேம்படும்படி செய்திட வேண்டும்.
  • ஒவ்வொருவரும் தங்கள் விலை பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்ய வேண்டும்.
  • கள் இறக்கி விற்பனை செய்ய அனுமதி அளிக்க வேண்டும்.
  • மத்திய அரசு விவசாயிகள் உற்பத்தி செய்யும் அனைத்து உணவு பொருட்களுக்கும் உற்பத்தி செலவுடன்கூடிய 50 சதவீதம் கூடுதலாக சேர்த்து வழங்கிட வேண்டும்.
  • மயில், காட்டுப்பன்றி, மான், யானை உள்ளிட்ட வனவிலங்குகள் விவசாய நிலத்தில் ஏற்படுத்தும் சேதத்திற்கு உடனடியாகச் சந்தை மதிப்பில் இழப்பீடு தொகை வழங்கிட வேண்டும்.
  • வக்பு வாரியமும், இந்து அறநிலைத்துறையும் இனாம் நிலங்களை உரிமை கொண்டாடுவதைத் தடை செய்திட வேண்டும் ஆகிய கோரிக்கைகள் உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடத்தப்படுகிறது.

விவசாயம் சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 5-ந்தேதி முதல் சுல்தான்பேட்டை ஒன்றியத்தைச் சார்ந்த பச்சார்பாளையத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய நிலையில் 9-வது நாளான நேற்று விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கஞ்சி காய்ச்சி கஞ்சித்தொட்டி திறந்து போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கின்றனர்.

மேலும் படிக்க

ஊரக மக்களுக்கு விருது| ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசு அறிவிப்பு|இன்றே விண்ணப்பியுங்க!

திருச்சியில் ஜுலை 27 முதல் 3 நாள் வேளாண் சங்கமம்! விவசாயிகளுக்கு அழைப்பு!

English Summary: Farmers protest in Coimbatore! Porridge tank opened protest!!
Published on: 14 July 2023, 12:29 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now