News

Sunday, 26 March 2023 01:28 PM , by: Poonguzhali R

Farmers request to set up Cauvery surplus water project!

தமிழகத்தில் உள்ள தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளாக உபரி நீர் திட்டத்தை அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்த விரிவான தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.

காவிரி உபரி நீர் திட்டம் அமைக்க வேண்டும் என்ற நீண்ட காலக் கோரிக்கையை நிறைவேற்ற அரசு தவறிவிட்டதாக தர்மபுரி விவசாயிகள் கூறியதுடன், கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட 2023-24ம் ஆண்டுக்கான விவசாய பட்ஜெட்டில் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளாக உபரி நீர் திட்டத்தை அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். இத்திட்டத்தின் கீழ், மழைக்காலத்தில் பாயும் உபரி நீர், மாவட்டம் முழுவதும் உள்ள ஏரிகளுக்கு திருப்பி விடப்பட்டு, நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்தும் வகையில் அமையும். ஆனால், இதுவரை அரசு தரப்பில் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை எனக் கவலை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில தலைவர் எஸ்.ஏ.சின்னசாமி பேசுகையில், ''தர்மபுரியில் வற்றாத நீர் ஆதாரங்கள் இல்லாத நிலையில் காவிரி உபரி நீர் திட்டம் காலத்தின் தேவை. இதுவரை, மழை மட்டுமே நீர் ஆதாரமாக உள்ளது. கடந்த ஆண்டு மாவட்டத்தில் 1,025 மி.மீ மழை பெய்து பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பின. ஆனால் தட்பவெப்ப நிலை அப்படியே இருக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. தண்ணீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்,'' என்று கூறியுள்ளார்.

கம்பைநல்லூரைச் சேர்ந்த மற்றொரு விவசாயி எஸ்.ஜெயபால் கூறுகையில், “மாவட்டத்தின் சில பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் அபாயகரமாக குறைந்துள்ளது. விவசாயிகள் நிலத்தடி நீரை நம்பி சாகுபடி செய்து, அதை ரீசார்ஜ் செய்ய வேண்டும். காவிரி உபரி நீர் திட்டம் செயல்படுத்தப்பட்டால், நிலத்தடி நீரை செழுமைப்படுத்தி, கடும் கோடையிலும் விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்கும்.

இதுகுறித்து தர்மபுரி நிர்வாக அதிகாரிகள் கூறுகையில், ‘‘தர்மபுரியில் உள்ள பல்வேறு விவசாய சங்கங்கள் மூலம் தமிழக அரசுக்கு கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க

தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை! வானிலை ஆய்வு மையம் தகவல்!!

பன்றிக்காய்ச்சல் அச்சம்! நாமக்கல்லில் தனிமைப்படுத்தப்பட்ட 20 பன்றிகள்!!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)