மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 31 October, 2021 7:48 PM IST
Farmers suffer - paddy procured stations

அரசு நெல் கொள்முதல் நிலையங்களில், ஏக்கருக்கு 30 நெல் மூட்டைகள் மட்டுமே வாங்குவோம் என அடம் பிடிக்கும் நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள், கணினி பிழையை திருத்தாமல் இருப்பதால், கூடுதல் மகசூல் பெறும் விவசாயிகள் தவிக்கின்றனர்.

கொள்முதல்

காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய இரு மாவட்டங்களிலும், நுகர்பொருள் வாணிப கழகத்தினர், 65 நெல் கொள்முதல் நிலையங்களை (paddy procured stations)துவக்கி உள்ளனர். இந்த கொள்முதல் நிலையங்களுக்கு, விற்பனைக்கு எடுத்து வரும் விவசாயிகளின் நெல் மூட்டைகளை, அந்தந்த கிராம நிர்வாக அலுவலர், வட்டார வேளாண் துறையினர் பரிந்துரையின்பேரில் நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் கொள்முதல் செய்கின்றனர்.

இதில் ஒரு ஏக்கருக்கு, 80 கிலோ எடை உடைய 30 நெல் மூட்டைகளுக்கு மேல், வாணிப கழக அதிகாரிகள் கொள்முதல் செய்வதில்லை என, விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். இதனால், ஒரு ஏக்கருக்கு 45 மூட்டைகள் மகசூல் பெறும் விவசாயிகள் பெரிதளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். குறிப்பாக தென்னேரி, சிட்டியம்பாக்கம், கோவிந்தவாடி, பரந்துார், வாலாஜாபாத் ஆகிய குறு வட்டங்களைச் சேர்ந்த, கூடுதல் மகசூல் (Yield) பெறும் விவசாயிகள், 30 மூட்டைகளுக்கு மேற்பட்டவற்றை கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

மேலும் படிக்க

2 லட்சம் ஏக்கரில் சம்பா பயிர் சாகுபடி: 90% பணிகள் நிறைவு!

நெற்பயிர் வயல் வரப்பில் பயறு வகை: மகசூலை அதிகரித்து, மன்வளத்தை கூட்டும்

English Summary: Farmers suffer as only 30 bundles of paddy per acre are procured at purchasing stations!
Published on: 31 October 2021, 07:48 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now