சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 5 May, 2023 2:29 PM IST
Farmers switched to cotton instead of paddy!
Farmers switched to cotton instead of paddy!

நெல்லுக்கு மாற்றாகப் பருத்தி விளைச்சல் பக்கம் தங்கள் கவனத்தைத் திருப்பியுள்ளனர், திருவாரூர் விவசாயிகள். நெல் உற்பத்திக்கு பெயர் போன திருவாரூரில் இதுவரை இல்லாத அளவுக்கு பருத்தி சாகுபடி அதிகரித்து இருக்கிறது.

டெல்டா மாவட்டங்களில் ஒன்றான திருவாரூரில் நெல் சாகுபடியே முதன்மையான தொழிலாக இருந்து வருகின்றது. தமிழ்நாட்டின் நெல் உற்பத்தியில் முன்னணி மாவட்டமாகத் திருவாரூர் இருந்து வருகின்றது. அதே நேரத்தில் இயற்கை பேரிடர்கள் மற்றும் தண்ணீர் பிரச்னை உள்ளிட்டவற்றால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், இதனால் நெல்லுக்கு மாற்றாக பருத்தியின் பக்கம் கவனத்தை திரும்பி இருக்கின்றனர் திருவாரூர் பகுதி விவசாயிகள்.

குறிப்பாகத் தண்ணீர் பிரச்னை கருத்தில் கொண்டு, கோடையில் நெல் சாகுபடியினைக் கைவிடுத்துப் பருத்தி சாகுபடியினைத் தொடங்கியுள்ளனர். நெல் சாகுபடிக்கு ஆகும் செலவை விட குறைவான செலவே பருத்திக்கு தேவைப்படுகிறது என்பதாலும், நான்கில் ஒரு பங்கு நீரே பருத்திக்கு போதுமானது என்பதால் அதிக லாபம் ஈட்ட முடிகின்றது என திருவாரூர் பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

அதே போன்று பல்வேறு சாதகமான அம்சங்கள் இருப்பதால், வலங்கைமான், மன்னார்குடி, நீடாமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாகவே பருத்தி சாகுபடி தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. முதலில் கிலோ 80 ரூபாய்க்கு விற்பனையான பருத்தி, கடந்த ஆண்டு 110 ரூபாயை எட்டியது.அதன் விளைவாக மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு 41 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பருத்தி பயிரிடப்பட்டு நல்ல விளைச்சலும் கிடைத்துள்ளது என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க

கோவையில் காணப்பட்ட அரிய வகை நாகப்பாம்பு!

கத்திரி வெயில் தொடங்கியது! வெயிலைத் தாங்க தயாராகுங்கள்!!

English Summary: Farmers switched to cotton instead of paddy!
Published on: 05 May 2023, 02:29 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now