சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 27 November, 2020 11:57 AM IST
Credit: ANI
Credit: ANI

மத்திய பாஜக அரசின் புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து டெல்லி எல்லையில் விவசாயிகள் முகாமிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். கோட்டையை நோக்கி பேரணி செல்ல முயன்ற விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி விரட்டியடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா ஆகிய திருத்தங்களுடன் புதிய வேளாண் சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இந்த சட்டம் விவசாயிகளையும், சில்லரை வியாபாரிகளையும் பாதிக்கும் எனக் கூறும் விவசாயிகள் நேற்றும் இன்றும் (நவ., 26 & 27) தேதிகளில் டெல்லி கோட்டையை நோக்கி சென்று போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.

போராட்டத்திற்கு அழைப்பு

இந்த போராட்டத்திற்கு பாரதிய கிசான் யூனியன் மற்றும் அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக்குழு அழைப்பு விடுத்தன. இதையொட்டி ஏரானமான விசாயிகள் மாநிலம் முழுவதிலிருந்தும் டெல்லி நோக்கி படையெடுத்தனர். குறிப்பான பஞ்சாப் மாநில விசாயிகள் டிராக்டர்களிலும், நடந்தும் டெல்லிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

போலீஸ் அனுமதி மறுப்பு

இந்த போராட்டத்திற்கு அனுமதி அளிக்காத டெல்லி காவல்துறை, டெல்லிக்குள் நுழையும் அனைத்து பாதைகளையும் அடைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்திற்கு வந்த விவசாயிகள் டெல்லியின் எல்லையிலேயே முகாமிட்டு போராட்டத்தை தொடங்கியுள்ளனர். தடையை மீறி பேரணியாக செல்ல முயற்சிக்கும் விவசாயிகள் மீது போலீசார் விரட்டியடித்தவண்ணம் உள்ளனர். இதனால் டெல்லி எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

டெல்லி சிங்கு எல்லை

இந்நிலையில், இன்று காலையிலும் டெல்லியின் சிங்கு எல்லையில் (ஹரியானா-டெல்லி எல்லை) விவசாயிகள் பேரணியாகச் செல்ல முயன்றனர். அவர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி விரட்டியடித்தனர். இப்போராட்டம் காரணமாக சிங்கு எல்லையில் போலீஸ் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க..

நிவர் புயல் பாதிப்பு : பயிர் சேதம் கணக்கெடுப்பு துவக்கம்!!

உழவர் -அலுவலர் தொடர்புத் திட்டம் சேலத்தில் அறிமுகம்!!

மானியத்தில் திறந்தவெளி கிணறு அமைக்க விண்ணப்பிக்கலாம்!!

English Summary: Farmers to resume ‘Dilli Chalo’ protest, against three contentious agricultural bills, delhi police nod for temporary prisons
Published on: 27 November 2020, 11:57 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now