News

Tuesday, 10 May 2022 11:22 AM , by: Deiva Bindhiya

Fines ranging from Rs.100 to Rs.5000 if garbage is not segregated

சென்னை: திடக்கழிவு மேலாண்மை துணைச் சட்டம், 2019ன் கீழ் உள்ள விதியை அமல்படுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளதால், வீட்டுக் குப்பைகளை தரம் பிரிக்கத் தவறியதற்காக, நகரவாசிகள் விரைவில் ரூ.100 அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். குப்பை கிடங்குகளுக்கு அனுப்பப்படும் குப்பைகளை குறைக்க, இது முக்கிய படியாகும்.

திடக்கழிவு மேலாண்மை துணைச் சட்டத்தின் அட்டவணை V இன் படி, குடிமை அமைப்பு தனி நபர் வீடுகளுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்படலாம். அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் குழு வீடுகளுக்கு 1,000 ரூபாயும், மொத்த குப்பைகளை வெளியேற்றுவோர்களுக்கு 5,000 ரூபாயும் அபராதம் விதிக்கப்படுகிறது. அதிகாரிகளின் கூற்றுப்படி, நகரின் 15 மண்டலங்களில் ஒரு நாளைக்கு 5,200 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. இது 95% வீடுகளில் கன்சர்வேன்சி பணியாளர்களால் சேகரிக்கப்படுகிறது மற்றும் பாதிக்கும் குறைவான வீடுகளில் மட்டுமே மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் என பிரிக்கப்படுவது குறிப்பிடதக்கது.

"குப்பைகளை பிரிக்காத குடியிருப்பாளர்களுக்கு அறிவுறுத்தல்களுடன் கூடிய அறிவிப்பு வழங்கப்படும் மற்றும் 15 நாட்கள் அவகாசம் வழங்கப்படும். தரம் பிரிக்கப்படாத குப்பைகளை தொடர்ந்து கொடுத்தால், ஒரு நாளைக்கு, 100 ரூபாய் மற்றும் 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்,'' என்று அதிகாரிகளால் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரிக்கப்பட்ட குப்பைகள் செயலாக்க மையங்களுக்கு அனுப்பப்படும் அதே வேளையில், பிரிக்கப்படாத குப்பைகள் வள மீட்பு மையங்களுக்கு அனுப்பப்படுகின்றன. அங்கிருந்து, மக்காத உலர் குப்பைகள் மறுசுழற்சி செய்பவர்களுக்கு வழங்கப்படுகிறது, அதே நேரத்தில் ஈரமான குப்பை உரம் மற்றும் உயிர்-சிஎன்ஜி தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. பிளாஸ்டிக் மூட்டைகள், சிமென்ட் ஆலைகளுக்கும், மீதமுள்ள குப்பைகள் பெருங்குடி, கொடுங்கையூரில் உள்ள குப்பை கிடங்குகளுக்கும் அனுப்பப்படுகிறது.

"தற்போது, எங்கள் குடியிருப்பில் உள்ள சில வீடுகளில் குப்பைகளை தரம் பிரித்து வைத்தாலும், அவை சேகரிக்கப்பட்ட பிறகு பிரிக்கப்படாத குப்பைகளுடன் கலக்கப்படுகின்றன. மாநகராட்சியும் சரி செய்ய வேண்டும்,'' என, தி.நகர் குடியிருப்போர் நல சங்கத்தைச் சேர்ந்த வி.எஸ்.ஜெயராமன் கூறினார். ஏப்ரல் 4 முதல் மே 5 வரை, பிரித்தெடுக்காத 35 மொத்தமாக குப்பைகளை வழங்குவோர்களுக்கு, அதிகாரிகள் ரூ.1.5 லட்சம் அபராதம் விதித்தனர் என்பது குறிப்பிடதக்கது.

மேலும் படிக்க:

அமுதம் திட்டத்தை துவக்கி வைத்தார், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

தமிழகம்: தென் சென்னையில் மே 11ம் தேதி மேட்ரோவாட்டர் சேவை தடைபடும்

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)