நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 18 August, 2022 7:57 PM IST
Women Branch (HDFC Bank)

வங்கித்துறையில் பாலின சமத்துவத்தை ஊக்குவிக்கும் வகையில், கேரளாவில் தனது முதல் மகளிர் வங்கி கிளையை ஹெச்.டி.எப்.சி துவங்கியுள்ளது. முன்னணி தனியார் வங்கியான ஹெச்.டி.எப்.சி தனது முதல் மகளிர் கிளையை கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள செரூட்டி சாலையில் திறந்துள்ளது.

மகளிர் வங்கி (Women Bank)

வங்கி கிளையை கோழிக்கோடு மாநகராட்சி மேயர் பீனா பிலிப் நேற்று திறந்து வைத்தார். புதிய வங்கி கிளையில் 4 பெண்கள் பணியாற்றுகின்றனர். தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி உள்ளடக்கிய வங்கியின் தென் மண்டல தலைவர், சஞ்சீவ் கூறுகையில், 'வங்கியின் பாலின சமத்துவத்தை மேம்படுத்தும் நடவடிக்கையின் மற்றுமொரு உதாரணமாக அனைத்து மகளிர் வங்கி கிளை துவங்கப்பட்டுள்ளது' என்றார்.

வங்கியின் பன்முகத்தன்மை மற்றும் சமவாய்ப்பு கொள்கைக்கு வலு சேர்க்கும் வகையில், தென்னிந்தியாவில் முதல் அனைத்து மகளிர் கிளை துவங்கப்பட்டுள்ளதாக HDFC வங்கி தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

மார்ச் 31, 2022 நிலவரப்படி, ஹெச்.டி.எப்.சி வங்கியில் 21.7 சதவீதம் பெண் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 2025க்குள் பெண் பணியாளர்களின் எண்ணிக்கையை 25 சதவீதமாக அதிகரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

எல்ஐசி-யில் மீண்டும் வருகிறது மெடிக்ளைம் பாலிசி!

அனைத்து விதமான வரிகளுக்கும் ஒரே ரசீது வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை!

English Summary: First Women's Bank Opening: HDFC Bank Goes AWESOME!
Published on: 18 August 2022, 07:57 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now