அறுவடை செய்த நெல்லினை விற்பனை செய்ய உள்ள வழிகள் என்ன? நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் மக்காச்சோள சாகுபடி சிறப்புத் திட்டம்- விவசாயிகளுக்கு ரூ.6000 மதிப்பிலான தொகுப்பு! கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 18 June, 2023 4:54 PM IST
Former Chief Justice P Sadashivam visited Krishi Jagaran

இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதியும், கேரளாவின் முன்னாள் ஆளுநருமான பி சதாசிவம் (பழனிசாமி சதாசிவம்) கிரிஷி ஜாகரனைச் சந்தித்தார்.

இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதியும், கேரளாவின் முன்னாள் ஆளுநருமான பி சதாசிவம் (பழனிசாமி சதாசிவம்) கிரிஷி ஜாகரனைச் சந்தித்தார்.ஐசிஏஆர் விலங்கு அறிவியலின் முன்னாள் டிடிஜி மற்றும் துவாசு மதுராவின் முன்னாள் துணைவேந்தர் டாக்டர். கேஎம்எல் பதக், சோனாலிகா குழுமத்தின் மூலோபாய விவகாரத் தலைவர் பிமல் குமார், தாவர அடிப்படையிலான உணவுத் தொழில் சங்கத்தின் செயல் இயக்குநர் சஞ்சய் சேத்தி, அக்ரி விஷன் பேச்சாளர் டாக்டர். விவி சதாமத்தே ஆகியோர் கலந்து கொண்டனர்.

அனைவரையும் கிருஷி ஜாகரன் உறுப்பினர்கள் கரவொலியுடன் வரவேற்றனர். கிருஷி ஜாகரன் நிறுவனர் மற்றும் தலைமை ஆசிரியர் எம்.சி.டொமினிக் மற்றும் இயக்குனர் ஷைனி டொமினிக் ஆகியோர் விருந்தினர்களை பரிசுகள் வழங்கி வரவேற்றனர்.

தமிழகத்தில் ஈரோடு மாவட்டம் பவானி, காடப்பநல்லூர் என்கிற கிராமத்தில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்த சதாசிவம், அரசுப் பள்ளியில் தனது பள்ளி படிப்பை முடித்தார். அதன்பின் சென்னை அம்பேத்கார் சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்றார். 1973 ஆம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு செய்தார். 1996 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக பொறுப்பேற்றார். அதன்பின்னர் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்ற நீதிபதியாக பணிபுரிந்தார். 2007 ஆம் ஆண்டு இந்திய உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

2013 ஆம் ஆண்டு 40-வது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார். பதஞ்சலி சாஸ்திரிக்கு பின்னர் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகித்த தமிழர் என்கிற பெருமையும் பெற்றார். தான் நீதிபதியாக பதவி வகித்த காலத்தில் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த பல வழக்குகளை திறமையாக கையாண்டு அதற்கு தீர்வு கண்டுள்ளார்.

2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், ஓய்வுப்பெற்ற நிலையில், அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் கேரள மாநிலத்தின் கவர்னராக பொறுப்பேற்றார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்த ஒருவர், மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. 5 ஆண்டுகள் முழுமையாக ஆளுநராக பதவி வகித்த சதாசிவம் 2019 ஆம் ஆண்டு ஓய்வுப்பெற்றார்.

இப்போது 2019க்குப் பிறகு அவர் விவசாயத்தில் கவனம் செலுத்துகிறார்.. தனது சொந்த கிராமத்தில் சுமார் 30 ஏக்கர் நிலத்தில் தென்னை, கரும்பு மற்றும் வாழையை முக்கியமாக பயிரிடுகிறார்.

பிரதமருடனான சந்திப்பில், மத்திய அரசின் திட்டங்கள் எதுவும் சாமானிய விவசாயிகளைச் சென்றடையவில்லை என்றும், எனவே இத்திட்டம் குறித்த தகவல்களை ஹிந்தி மற்றும் ஆங்கிலம் மட்டுமின்றி, அனைத்து உள்ளூர் மொழிகளிலும் மாற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

விவசாயிகளுக்காக கிருஷிஜாகரன் செய்து வரும் பணிகளைப் பாராட்டிய அவர், கிருஷிஜாகரன் மேலும் வளர்ச்சியடைய உறுதுணையாக இருப்பேன் என்று தெளிவுபடுத்தினார்.

விருந்தினராக வந்திருந்த அனைவரும் கிருஷி ஜாகரின் பணியை பாராட்டி தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்...

மேலும் படிக்க

விவசாயிகளை விட அதிகம் சம்பாதிப்பது இடைத்தரகர்கள் தான்- முன்னாள் CJI சதாசிவம்

தந்தையின் மறைவால் விவசாயத்தில் இறங்கிய மகள்- கைக்கொடுத்த மிளகாய்!

English Summary: Former Chief Justice P Sadashivam visited Krishi Jagaran
Published on: 18 June 2023, 04:54 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now