மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 12 April, 2021 4:14 PM IST

தமிழ் மொழியின் கூற எத்தனையோ காவியங்களும் இலக்கியங்கள் இருந்தாலும், தமிழ் என்றாலே உடனே அனைவருக்கும் திருக்குறளும், பாரதியார் கவிதைகளும் தான். தமிழை வளர்க்க பலரும் பல உத்திகளை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், 10 திருக்குறள் கூறினால்,  ஒரு Ear phone மற்றும் மாஸ்க் இலவசம் என்ற அறிவிப்பால் தனியார் செல்போன் (Mobile Shop) கடையில் மாணவ, மாணவிகள் அலைமோதியுள்ளனர்.

தமிழக அளவில் தற்போது பள்ளி மாணவ, மாணவிகளிடையே மட்டுமில்லாமல், கல்லூரி மாணவ, மாணவிகளிடையேயும், பெருமளவில் திருக்குறள் கற்கும் ஆர்வம் அதிகரித்து வருகின்றன. காரணம், திருக்குறள் (Tirukkural) எந்த மதத்தினையும் சார்ந்தது அல்ல, எந்த சமயத்தினையும் சார்ந்தது அல்ல, பொதுவானது. இந்நிலையில், கரூர் செங்குந்த புரத்தில் ஸ்ரீயா மொபைல் என்கின்ற தனியார் மொபைல் கடையில், கரூர் மாவட்டத்தில் உள்ள மாணவ, மாணவிகள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் மட்டுமில்லாமல் தமிழ் ஆர்வலர்கள் என்று ஏராளமானோர் திருக்குறள் 10 சொன்னால் ஒரு Ear Phone இலவசம் என்றும், அதனுடன் கொரோனாவினை (coronavirus) தடுக்கும் மாஸ்க்கும் இலவசம் என்றும் அறிவித்தது.

இதனால், மாணவ, மாணவிகள், தமிழ் ஆர்வலர்கள் தினந்தோறும் சென்று 10 திருக்குறள் சொல்லி, அவர்களுக்கு இலவசமாக கொரோனாவினை தடுக்கும் மாஸ்க் (Face Mask) மற்றும் இலவச Ear Phone-யை இலவசமாக வாங்கி செல்கின்றனர். இந்நிகழ்ச்சிக்கு கருவூர் திருக்குறள் பேரவை நிறுவனத்தலைவர் மேலை. பழநியப்பன் நடுவராக கலந்து கொண்டும், பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினர். ஸ்ரீயா மொபைல்ஸ் என்கின்ற தனியார் மொபைல் கடையின் நிறுவன பங்குதாரர்கள் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை சிறப்பாக செய்திருந்தனர்.

இதற்கு முன்னதாக, கரூரில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 10 திருக்குறள் சொன்னால் ½ லிட்டர் பெட்ரோல் இலவசம், 20 திருக்குறள் சொன்னால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசம் என்கின்ற திட்டத்தினை, கரூர் வள்ளுவர் பெட்ரோல் பங்க் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

English Summary: Free Earphone , if you say Thirukkural.. Awesome mobile shop !!
Published on: 12 April 2021, 04:14 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now