News

Sunday, 20 November 2022 04:46 PM , by: Poonguzhali R

நாட்டின் மில்லியன் கணக்கான ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஒரு பெரிய மகிழ்ச்சி செய்தி இருக்கிறது. டீலரிடமிருந்து பெறப்பட்ட ரேஷன் குறித்த தேவையான தகவல்கள் அரசாங்கத்திடம் இருந்து வருகின்றன. இதன் பலன்கள் ஏப்ரல் 2023 முதல் நாட்டின் கோடிக்கணக்கான அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும்.

தற்போது, ​​ஏற்பட்டுள்ள இந்த மாற்றங்களுக்குப் பிறகு, சுமார் 60 லட்சம் ரேஷன் கார்டுதாரர்கள் நல்ல மற்றும் சத்தான ரேஷனைப் பற்றி சிறிதும் கவலைப்பட வேண்டியதில்லை. வரும் ஏப்ரல் 1, 2023 முதல் இந்த பலன் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக NFSA இலிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, ஏப்ரல் 1, 2023 முதல், அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் போர்டிஃபைட் அரிசியை வழங்க அரசு முடிவு செய்துள்ளது இதன் காரணமாக கோடிக்கணக்கான கார்டுதாரர்கள் சத்தான ரேஷனை எளிதாகப் பெறுவார்கள் எனக் கூறப்படுகிறது.

அதாவது, போர்டிஃபைட் அரிசியை மக்கள் பெறுவார்கள் எனக் கூறப்படுகிறது.
சாதாரண அரிசிக்கு போர்டிஃபைட் படிவம் கொடுக்க 11 நிறுவனங்கள் அடங்கிய குழுவை அரசு ஏற்பாடு செய்துள்ளது. தற்பொழுது இந்த வசதி ஹரித்வார் மற்றும் யுஎஸ் நகர் மக்களுக்கு மட்டுமே இருக்கிறது. இதோடு, நாடு முழுவதும் உள்ள மற்ற மக்கள் ஏப்ரல் 2023 முதல் போர்டிஃபைட் அரிசியை பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், ஏழை மக்களுக்கு சத்தான தானியங்கள் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. கோதுமை, அரிசியோடு பிற சத்தான பொருட்களும் விரைவில் அரசு கடைகளில் கிடைக்கும். தேவைப்படும் மக்களின் ஊட்டச்சத்தை மனதில் வைத்து, அரசு பரிசீலித்து வருவதாக அரசு தெரிவித்துள்ளது. இந்த பொருட்கள் அனைத்தும் ஏழை மற்றும் எளிய மக்களுக்கு மானிய விலையில் கிடைக்கும். இத்திட்டம் விரைவில் வரலாம் எனக் கூறப்படுகிறது.

போர்ட்டஃபைட் அரிசி என்றால் என்ன?

சாதரண அரிசியை விட போர்ட்டஃபைட் அரிசி அதிக சத்து நிறைந்தது. இதில் சாதாரண அரிசியைப் பற்றி பேசுகையில், அதில் குறிப்பிட்ட அளவு தாதுக்கள், புரதங்கள் மற்றும் வைட்டமின்கள் சேர்க்கப்படுகின்றன. அதே நேரத்தில், போர்ட்டஃபைட் அரிசியில் இரும்பு, வைட்டமின்கள், கால்சியம் மற்றும் பி-12 உள்ளிட்ட பல கூறுகள் உள்ளன. 

மேலும் படிக்க

காசி தமிழ் சங்கமம்: 13 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் வெளியீடு

பொங்கல் பரிசு தொகுப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)