மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 13 April, 2022 11:58 AM IST
Fruits prices rise up!!!

பெட்ரோல், டீசல் முதலானவைகளின் விலை ஏற்றத்தினாலும், சுங்கச் சாவடியில் வசூலிக்கப்படும் சுங்க வரிக் கட்டணத்தின் விலை ஏற்றத்தாலும் பழங்களின் விலை அதிகரித்துள்ளது.

பொதுவாக, சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினசரி நிர்ணயம் செய்து வருகின்றன. 

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கடந்த மாதம் 22-ம் தேதி மீண்டும் உயர்த்தப்பட்டது. இதற்கிடையே, ரஷியா-உக்ரைன் போர் காரணமாக எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்ட பாதிப்பால் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில்  எரிபொருள் விலை 51 சதவீதம் எனும் நிலையைத் தாண்டி உயர்ந்துள்ளது.

சென்னையில் கடந்த சில நாளாக  ஒரு லிட்டர் பெட்ரோல் 110 ரூபாய் 85 காசுக்கும், டீசல் 100 ரூபாய் 94 காசுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.  எனவே, மக்களின் அத்தியாவசிய பொருட்களான, சமையல் எண்ணெய், எரிவாயு , காய்கறிகள் என அனைத்தும் விலை உயர்ந்துள்ளது. 

அதோடு சுங்கச் சாவடியில் வசூலிக்கப்படும் சுங்க வரியும் உயர்வு அடைந்துள்ளது.  சுங்க வரியின் காரணமாகவும் பழங்களின் விலை அதிகரித்துள்ளது.

பழங்களின் ஏற்றுமதி, இறக்குமதியில் சுங்க வரி மைய இடம் வகிக்கிறது.  சுங்க வரியின் ஏற்றத்தாலும் பழங்களின் விலை கிடுகிடு என உயர்ந்துள்ளது என பழ வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 

பழைய விலை – புதிய விலை

சிம்ளா ஆப்பில் ரூ.140 -  160

சாத்துக்குடி ரூ. 45-65 -  80

ஆரஞ்சு  ரூ. 60-80  -  100

கோடைக்காலப் பழங்களான, தர்பூசணி, வெள்ளரி முதலான பழங்களின் விலையும் உயர்ந்துள்ளது.  இந்த உயர்வின் காரணமாக பழங்களை வாங்கும் மக்களின் வரத்துக் குறைந்துள்ளது.  ஆனால் இதே நிலை நீடித்தால் பழங்களின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதென பழ வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். 

மேலும் படிக்க...

1 கிலோ எலுமிச்சை 200 ரூபாய்!

காய்கறிகள் மற்றும் பழங்களுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை

English Summary: Fruits prices rise up!!!
Published on: 13 April 2022, 11:58 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now